சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  678 news
  •  ·  17 friends
  • S

    24 followers

சட்டவிரோத மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற உள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 20 கிராம சேவையாளர் பிரிவுகளிலேயே  தொடர்ச்சியான  சட்டவிரோத மணல் அகழ்வு  மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இவற்றை கட்டுப்படுத்துவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கும்  வகையில் இந்த வாராம் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற உள்ளதுகிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள 105 கிராம சேவையாளர் பிரிவுகளில் தற்போது 20 கிராம சேவையாளர் பிரிவுகளில் மாத்திரம் தொடர்ச்சியான சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.இவ்வாறான சட்டவிரோதமாகஅகழ்ந்தெடுக்கப்படும் மணல் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மணல் கொண்டு செல்வதற்குரிய அனுமதிப்பத்திரமே பயன்படுத்தப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு மணல் கொண்டு செல்லப்படுகின்றது.தற்போதைய கொறனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற பயணத் தடை காலத்தில் குறிப்பாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கள் முற்றாக நிறுத்தப்பட்டு இருக்கின்ற நிலையில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து மணல் வடபகுதிக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.திருகோணமலையில் இருந்து வருவதற்கான வழித்தட அனுமதிகளின் படி கிளிநொச்சிக்குள் நுழைவதற்கு முன் ஏ-35 வீதி மற்றும் ஏ-09 வீதிகளில் புநாவ. முல்லைத்தீவு நெத்தலியாறு . இரணைமடு சந்தி ஆகிய பகுதிகளில் பொலிசாரின் சோதனை சாவடிகளில் பரிசோதித்து கையெப்பமிடப்பட வேண்டும் அவ்வாறில்லாது கொண்டு செல்லப்படும் மணல் அல்லது கிரவல் சட்டவிரோதமானது.என்றும் நேற்று முன்தினம் (05-06-2021) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கனிய வளத்திணைகள அதிகாரியால் தெரிவிக்கப்ட்டமை குறிப்பிடத்தக்கது.குறித்த கலந்துரையாடலின்போது ராணுவத்தினர் தற்போது குறிப்பிட்ட சில பிரதேசங்களில் மணல் அகழ்வுகள் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக கண்காணிப்புகள் மூலம் ராணுவத்தினரின் சுற்றுக்காவல் நடவடிக்கைகளின் மூலமும் இந்த சட்டவிரோத மணல் அகழ்வு நிறுத்தப்பட்டிருக்கின்றன எனவும் எதிர்காலத்திலும் தொடர்ந்து இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ள கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதி அவர்கள் இது தொடர்பில் தங்களுக்கு தகவல்களை வழங்குகின்ற போது மிக விரைவாக அந்த நடவடிக்கைகளை எடுத்து சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரையான காலப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 211 வாகனங்கள் மற்றும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 20 கிராம சேவையாளர் பிரிவுகளிலேயே தொடர்ச்சியாக இடம் பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்துவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த வாரம் மாவட்ட அரச உயரதிகாரிகள் பொலிசார் இரானுவத்தினர் பிரதேச செயலாளர்களை ஒன்று சேர்த்து விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற உள்ளது.

  • 610
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads