சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  678 news
  •  ·  17 friends
  • S

    24 followers

தமிழ் அரசியல் தலைவர்கள் அரசியல் நோக்கங்களிற்காக மக்களை குழப்புகின்றனேரே அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் தலைவர்கள் அரசியல் நோக்கங்களிற்காக மக்களை குழப்புகின்றனேரே தவிர மக்கள் குழப்பமடைய தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். .

கிளிநொச்சி மாவட்டத்தின் கொவிட் நிலைமைகள் மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் அத்தியாவசிய தேவைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று பகல் இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட இராணுவ தளபதி, பொலிஸ் உயரதிகாரிகள், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்க்ள, சுகாதார சேவையினர் உள்ளிட்ட அரச திணைக்கள உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக இன்றைய கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஆடைத்தொழிற்சாலைகளில் தொற்றுக்கள் பரவுவதாக குறிப்பிடப்பட்டாலும் அது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர். மேலும் ஓரிரு நாட்களில் குறித்த விடயம் அவதானித்து இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.இதேவேளை இந்த மாவட்டத்தில் தொடர்ச்சியாக சட்ட விரோதமான மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது. இன்றைய கலந்துரையாடலில் எவ்விதமான தீர்வும் எட்டப்படவில்லை. அடுத்த செவ்வாய்க்கிழமையளவில் மற்றுமொரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் இறுக்கமான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கொழும்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் விவகாரம் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் வினவினர். குறித்த விடயம் தொடர்பில் அரசியல்வாதிகள் உள்நோக்கங்களை வைத்துக்கொண்டு மக்களை குழப்பும் கருத்துக்களை கூறி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சுமந்திரன் கொழும்பை மையமாக கொண்ட அரசியல் கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்.

விபத்து இடம்பெற்ற பகுதியில் மீன் பிடிக்க யாரும் செல்வதில்லை. அங்கு எந்த விதமான தொழில் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறான நிலையில் மக்களை குழப்புகின்ற கருத்துக்களை அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

தடுப்பூசி ஏற்றும் விடயத்திலும் அந்த ஊசி வேண்டாம், இந்த ஊசி வேண்டும் என்ற வகையில் மக்களை குழப்பும் வைகையிலான கருத்துக்களை அவர்கள் முன்வைத்து வருகின்றனர் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

  • 670
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads