Category:
Created:
Updated:
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் கிராமத்தில் வீட்டு கிணற்றில் இருந்து வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு நடுப்பகுதியில் கண்டாவளைப் பகுதியில் இடம்பெற்றவீதிவிபத்தில் படுகாயமடைந்த நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்த குறித்த பெண் தனிமையில் வசித்துவந்த நிலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கிணற்றில் சடலமாக இனங்காணப்பட்டுள்ளார்.வேலாயுதம் பரமேஸ்வரி வயது 74 என்பவரே குறித்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தவறி விழுந்து விட்டாரா? அல்லது தற்கொலையா? கொலையா? என தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.