சினிமா செய்திகள்
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது வழக்கமான உண்மை என்றாலும், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது என
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி
யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மடோன் அஸ்வின். அதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்த மாவீர
வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்
அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயால் பல கிலோ மீட்ட
‘விடாமுயற்சி’ திரைப்படம் எப்போது வெளிவரும்?
அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத காரணத்தினால் பொங்கல் ரிலீஸ்
மகாராஜா படத்தை பாராட்டிய சீன தூதர்
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான மகாராஜா இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் கூட வெற்றிநடை போட்டு வருகி
கவியரசர் மாற்றிக் கொடுத்த பாடல் வரிகள்
நாலு பேருக்கு நன்றி என்கிற பாடலில் வரும் கடைசி சரணத்தை கவியரசர் பின்வருமாறு எழுதியிருந்தார்'வாழும் போது வருவோர்க்கெல்லாம்வார்த்தையாலே நன்றி சொல்வோம்.ப
நடிகர் எஸ்.எஸ்.ஆர் MGR பற்றி கூறியது
1958, ஜனவரியில் பெரியார் மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களை அன்றைய பிரதமர் நேரு 'நான்சென்ஸ்' என்று சொன்னதைக் கண்டித்து, கடும் எதிர்ப்பு நிலவியது. அந்த உண
ஆட்டம் போட்ட கௌதம் மேனன்
கோட் படத்தை அடுத்து ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் உருவாகி வருகி
தற்போது அவர் குட் பேட் அக்லி படத்திற்கு தனது பகுதிக்கான டப்பிங் பணியையும் முடித்துள்ளார். இது குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைத்தள
‘உதயம்’ தியேட்டரை இடிக்கும் பணி தொடங்கியது
சென்னை அசோக்நகரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது உதயம் திரையரங்கு. இதில் 4 திரையரங்குகளில் இயங்கி வருகின்றன. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக
Ads
 ·   ·  2230 news
  •  ·  1 friends
  • 1 followers

விலங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து முன்னாள் அமைச்சர் தகவல்

தமது நிலங்களை பாதுகாப்பதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கம் மில்லியன் கணக்கான கங்காருக்களை, அண்மையில் கொன்றிருப்பதாக விவசாயத்துறை முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கையில் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிடப்படுவதால், பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் விலங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளை, அரசாங்கம் பரிசீலிக்கலாம் என்று மஹிந்த அமரவீர பரிந்துரைத்துள்ளார்.

சில சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் நடத்தப்படும் திட்டமிடப்பட்ட ஊடக காட்சிகளில் கவனம் செலுத்துவதை விட, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் மூன்று கலந்துரையாடல்களுக்குப் பிறகு, அவர்கள் தங்கள் தனிப்பட்ட உயிரியல் பூங்காக்களுக்காக இலங்கையின் 100,000 டோக் மக்காக்களை கோரினர்.

திட்டம் தொடர்பான ஆவணங்கள் பரிமாறப்பட்டன. இருப்பினும், திட்டம் தொடங்கும் போது, ​​பல சுற்றுச்சூழல் அமைப்புகள் அதற்கு எதிராக செயற்பட்டன. இதன் விளைவாக, அந்த திட்டத்தை தொடர முடியவில்லை" என்று முன்னாள் அமைச்சர் கூறினார்.

தற்போதைய ஜனாதிபதி சீனாவிற்கு விஜயம் செய்ய உள்ளார், அங்கு அவர் இது தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க முடியும். இந்த பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்க சீனா மற்றும் பிற நாடுகளுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யலாம்.

இந்த முயற்சியானது தூதரக உறவுகளை வலுப்படுத்தலாம். அத்துடன் இந்த விலங்குகளால் ஏற்படும் அச்சுறுத்தலை நிவர்த்தி செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

டோக் மக்காக்கள், குரங்குகள், முள்ளம்பன்றிகள், மயில்கள் மற்றும் இராட்சத அணில்கள் பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றாலும், இந்த விலங்குகள் சீனா போன்ற நாடுகளில் மதிப்புமிக்கதாகக் கருதப்படுகின்றன.

உதாரணமாக, தெஹிவளை மிருகக்காட்சிசாலையில், கங்காருக்களைப் பார்த்து மகிழ்கிறோம், ஆனால் அவுஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ சின்னமாக கங்காரு அங்கீகரிக்கப்பட்ட போதிலும், அந்த நாடு அண்மையில் மில்லியன் கணக்கான கங்காருக்களை அழித்துள்ளது.

இந்த நிலையில், விலங்குகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விவசாயிகளின் கிராமங்களில் நேரத்தை செலவிடுமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களை முன்னாள் அமைச்சர் வலியுறுத்தினார்.

அவர்களின் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டால், குறித்த விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை கைவிட்டு நகர்ப்புறங்களுக்குச் சென்று, முச்சக்கர வண்டிகளை ஓட்டுவது போன்ற வேலைகளிலேயே ஈடுபடுவார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் எச்சரித்துள்ளார்

0000

  • 546
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads