சினிமா செய்திகள்
எம். ஆர். ராதாவின் மனசு..
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகர் ரஞ்சித்தின் முன்னாள் மனைவி கூறிய உண்மை
90 ஆம் காலக்கட்டங்களில் பிரபல நடிகர் ரஞ்சித். இவர் இயக்கிய கவுண்டம்பாளையம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் ரஞ்சித் 1999
ஷாலின் ஷோயா கட்டிய கனவு வீடு
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஷாலின் ஷோயா. சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஒரு சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். மலையாள
தாயின் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்ட நடிகர்
கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் இறுதிச்
மூன்றாவது திருமணம் செய்ய போகும் நடிகர்
இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா  தமிழில் அன்பு என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் சுமாராக ஓடிய போதும், இந்த படத்தில் வரும்
அமெரிக்காவில் ஷார்ட் உடையில் நடிகை அஞ்சலி
தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பாப்புலர் நடிகை அஞ்சலி. அவருக்கு ஏராளம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.தற்போது நியூயார்க்கில் இருக்கும் அஞ்சலி ஷார்ட் உடைய
கங்குவா படம் பற்றிய அப்டேட்
நடிகர் சூர்யா நடித்துள்ள படங்களில் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படமாக உள்ளது கங்குவா.சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த பட
கனிகாவிற்கு வளையல் அணியும் விழா
கடந்த சில நாட்களுக்கு முன் சினேகன்-கனிகா இருவரும் கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷ செய்தி வெளியிட்டார்கள். இந்த நிலையில் கனிகாவின் 5வது மாத நிகழ்ச்சி அழகாக
9 நாள் முடிவில் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் மொத்த வசூல்
தனக்கு கிடைத்த வாய்ப்பை வேட்டையன் என்ற படத்தை இயக்கி தனது திறமையை வெளிக்காட்டி இருக்கிறார் ஞானவேல்.இப்படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரி
நடிகை ரம்யா கிருஷ்ணன் விவகாரத்து செய்கிறாரா?
தமிழில் 1983ம் ஆண்டு வெளியான வெள்ளை மனசு என்கிற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.ஐட்டம் டான்ஸ், அம்மன் வேடம், போல்டான கதாபாத
எஸ்.எஸ் சந்திரன் வேண்டாம்; கவுண்டமணியை போடுங்க - நடிகர் ராமராஜன்
கரகாட்டக்காரனில் கண்டிஷன் போட்டு ஜெயித்த ராமராஜன்கரகாட்டக்கரன் படத்தில் கவுண்டமணி இல்லை என்றால் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராமராஜன்
Ads
 ·   ·  1673 news
  •  ·  0 friends
  • 1 followers

கனடா பிரதமர் பதவி விலக கெடு - ஆளும் கட்சியின் 24 எம்.பிக்கள் போர்க்கொடி

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரும் 28ஆம் திகதிக்குள் பதவி விலக வேண்டும் என்று அவரது கட்சி எம்.பிக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டி வருகிறார். இதன்காரணமாக இரு நாடுகள் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

கனடா பிரதமரின் குற்றச்சாட்டுக்கு அந்த நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடா குடிமகன் கிடையாது, சீனாவின் தூண்டுதலின்பேரில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செயல்பட்டு வருகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த சூழலில் ஆளும் லிபரல் கட்சியில் பிரதமர் ஜஸ்டினுக்கு எதிராக 24 எம்.பிக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இது அவருக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த ஆண்டில் கனடா நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில் சந்தித்தால் லிபரல் கட்சி மோசமான தோல்வியை சந்திக்கும் என்று பெரும்பாலான எம்பிக்கள் கருதுகின்றனர். இதில் 24 எம்.பிக்கள் பகிரங்கமாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

கனடா நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 343 தொகுதிகளில் பெரும்பான்மையை நிரூபிக்க 172 எம்.பிக்களின் ஆதரவு தேவை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் லிபரல் கட்சிக்கு 160 இடங்கள் மட்டுமே கிடைத்தன. தற்போது கூட்டணி கட்சி ஆதரவுடன் லிபரல் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஜஸ்டின் ட்ரூடோ தலைமை வகிக்கக்கூடாது. லிபரல் கட்சி தலைவர் பதவி மற்றும் பிரதமர் பதவியில் இருந்து அவர் உடனடியாக விலக வேண்டும் என்று லிபரல் கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஆளும் கட்சியின் உயர்நிலைக் கூட்டம் கனடா தலைநகர் ஒட்டாவாவில் நேற்று முன்தினம் (23) நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அதிருப்தி எம்பிக்கள், வரும் 28ஆம் திகதிக்குள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும். இல்லையெனில் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இந்தியா, கனடா இடையிலான மோதலால் இருநாடுகளும் பரஸ்பரம் 6 தூதரக அதிகாரிகளை வெளியேற்றி உள்ளன. கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய தூதரக அதிகாரி சஞ்சய் குமார் வர்மா கூறியதாவது:

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் நான் உட்பட 6 இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா அரசு பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது.

கனடாவில் செயல்படும் காலிஸ்தான் தீவிரவாதிகள் குறித்த பட்டியல், ஆதாரங்களை கனடா அரசிடம் இந்தியா வழங்கி உள்ளது. இதுதொடர்பாக கனடா அரசு சார்பிலோ, கனடா காவல் துறை சார்பிலோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கனடாவில் உள்ள 26 காலிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால் கனடா அரசு ஆழ்ந்த மௌனம் சாதித்து வருகிறது. அந்த நாட்டு அரசு இரட்டை வேடம் போடுகிறது என தெரிவித்தார்.

00

  • 180
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads