சினிமா செய்திகள்
கமல்ஹாசன் செய்த உதவி - இயக்குநர் மகேந்திரன்
"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது."கமல் செய்த உதவி சிறியதுதான். ஆனால் இயக்குநர் மகேந்திரன் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற
Good Bad Ugly - சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து தயாராகியுள்ள படம் குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜ
ஒரு சொல் வெல்லும்,  ஒரு சொல் கொல்லும்
ஆரம்ப நாட்களில் மிகவும் சாதுவாக இருந்தார் . சாந்தமாக இருந்தார்.சகஜமாக எல்லோரிடமும் பழகினார் இளையராஜா.அதிலும் பத்திரிகைக்காரர்களிடம் மிக மிக பாசத்துடன
ரஜினியின் கூலி படம் காலியா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி (Coolie) படத்தின் வெளியீட்டு தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்ட
நடிகர் ராமராஜனின் சாதனைகள்
ராமராஜனை கிண்டல் செய்யும் பலருக்கு ராமராஜனின் சாதனைகள் தெரியாது..அவரது சாதனைகளில் சில.......1. 43 படங்களில் தனி கதாநாயகனாகநடித்திருக்கிறார், எந்த படத்
சாதனை நாயகி கே.ஆர்.விஜயா
வறுமையான குடும்பத்தில் பிறந்து, வயிற்றுப்பாட்டிற்காக நாடகங்களில் நடித்து, தற்செயலாக திரையுலகில் நுழைந்து, தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையான கே.ஆர்.வ
ஓம் காளி ஜெய் காளி
இயக்குநர் ராமு செல்லப்பா இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் பலர் நடித்து மார்ச் 28 2025 அன்று Jiohotstar யில் வெளியிடப்பட்டுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' எனு
இசைஞானி இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்
இசைஞானி இளையராஜா சமீபத்திய ஒரு நேர்காணலில் தளபதி படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கையத்தட்டு பாடல் பற்றிய ஒரு சுவாரசியத்தை கூறியுள்ளார். ராக்கம்மா கையத்தட
மூத்த நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் காலமானார்
பழம்பெரும் நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித
நடிகர் மாதவனும் இயக்குநர்  கே எஸ் ரவிக்குமாரும்
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் எந்த கேள்வி கேட்டாலும் வித்தியாசமாக சுவாரசியமாக பதில் சொல்பவர், சமீபத்தில் மாதவன் குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பி
அரிய ஆவணம்
"7-9-1949"இடையபட்டி நேத்தாஜி பாடசாலை கட்டிட நிதிக்காககலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்களின்கிந்தனார்காலட்சேபம் 7-9-49 அன்று நடைபெற்றது
மனித வணக்கம்  -  கமல்ஹாசன் கவிதை
தாயே, என் தாயே!நான்உரித்த தோலேஅறுத்த கொடியேகுடித்த முதல் முலையே,என் மனையாளின்மானசீகச் சக்களத்தி, சரண்.தகப்பா, ஓ தகப்பா!நீ, என்றோ உதறிய மைபடர்ந்தது கவி
Ads
 ·   ·  2821 news
  •  ·  1 friends
  • 2 followers

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான இருபதுக்கு 20 சர்வதேச தொடரை வென்றது இலங்கை

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான 3 ஆவதும், இறுதியுமான ஆட்டத்தில் 9 விக்கெட்களினால் அபார வெற்றியீட்டிய இலங்கை அணி 9 ஆண்டுகளில் முதல் முறையாக மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இருபதுக்கு 20 சர்வதேச தொடரைக் கைப்பற்றியது.

3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றியீட்டிய நிலையில் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி இலகு வெற்றியீட்டியது.

அதன் படி தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்று தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களைக் குவித்தது.

துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் ரொவ்மன் பொவெல் 37 ஓட்டங்களையும், குடகேஷ் மோட்டி 32 ஓட்டங்களையும் பிரண்டன் கிங் 23 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.

இலங்கையின் பந்துவீச்சில் மஹேஷ் தீக்ஷன 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், ஹசரங்க 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அதன் படி 163 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

10.1 ஓவர்களில் இலங்கை அணி 1 விக்கெட் இழப்புக்கு 100 ஓட்டங்களைக் கடந்தது. பின்னர் 18 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் 67 ஓட்டங்களையும், குசல் பெரேரா 52 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றனர்.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் 2015ஆம் ஆண்டு முதல் சர்வதேச இருபதுக்கு 20 தொடர் நடைபெற்றுள்ளதுடன் முதல் தடவையாக இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

000

  • 1573
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads