சினிமா செய்திகள்
என்.எஸ்.கிருஷ்ணனின் சமயோசித யோசனை
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இல்லத்துக்கு எதிர்த்தாற் போலிருந்த வீட்டில் வெளிக்கதவு சாத்தியிருந்தது. உள்ளே ஆட்கள் பின்பக்கமாக இருந்திருப்பர் போலும்.வெளி
நகைச்சுவையில்  விசுவரூபம் எடுத்தவர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்....... வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்ப
’வேட்டையன்’ படத்துடன் ரிலீஸ் ஆகிறது ‘விடாமுயற்சி’ டீசர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம், அஜித் நடித்த 'விடாமுயற்சி' படத்தையும் தயாரித்துள்ளது என்பதும், 'விடாமுய
‘மெய்யழகன்’ படத்தின் 18 நிமிட காட்சிகள் நீக்கம்
“இன்று முதல் சில காட்சிகள் நீக்கப்பட்டு, 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 38 நிமிடங்களாக திரையிடல் தொடரும். மெய்யழகனின் நீளம் மட்ட
தாதா சாகேப் பால்கே விருது பெறுகிறார் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி
பிரபல நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு 2022-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மிதுன் தா என்றும் அழைக்கப்ப
அரவிந்த் சாமியின் மகன் அடுத்த ஹீரோவாக ரெடி
இளம் பெண்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகர் அரவிந்த் சாமி. இவரைப் போல மாப்பிள்ளை கிடைக்க மாட்டாரா என ஏங்காத பெண்களே இல்லை.ரோஜா, பம்பாய், மின்சார கண்ணா போன
மனைவி பற்றி ஜெயம் ரவி சொன்னது உண்மை என உறுதிப்படுத்திய நடிகர்
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் நடிகர்களில் ஒருவராக வலம் வந்த ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறியிருந்தார். ஆனால் அவரது மனைவி, இந்த முடி
“லப்பர் பந்து" வெற்றிக்கு விஜயகாந்தின் ஆசீர்வாதமும் காரணம் - ஹரிஷ் கல்யாண்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்
வேட்டையன் படத்தில் ரஜினிகாந்திற்கு என்கவுண்ட்டர் போலீஸ் வேடம்
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ர
விவாகரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்
முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். அவர்களது வாழ்
வேட்டையன் படத்திற்காக அபிராமியை தேர்வு செய்த ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசுக்கு
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் துபாய்க்குச் சென்றுள்ளார். அங்கு நடந்த சைமா விருதுகள் 2024
Ads
 ·   ·  1503 news
  •  ·  0 friends
  • 1 followers

10 அணிகள் பங்கேற்புடன் 9 ஆவது ICC மகளிர் T20 உலகக்கிண்ணம் இன்று ஆரம்பம்

10 அணிகள் பங்கேற்கும் 9 ஆவது ICC மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (03) ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் ஆரம்பமாகிறது.

பங்களாதேஷில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த குறித்த தொடர் அங்கு நிலவிய போராட்டம் காரணமாக பாதுகாப்பின்மையால் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டது. அதன் படி ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள ஷார்ஜா மற்றும் துபாய் ஆகிய இரண்டு இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இன்றுமுதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை போட்டிள் நடைபெறவுள்ளன. கடந்த மகளிர் T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி அவுஸ்திரேலியா 6ஆவது தடவையாக சம்பியன் பட்டம் பெற்றது.

2024 T20 உலகக்கிண்ண தொடரில்,

குழு A யில் – அவுஸ்திரேலியா இந்தியா நியூசிலாந்து பாகிஸ்தான் இலங்கை ஆகிய அணிகளும்,

குழு B யில் தொடரில் அணிகளாக -  பங்களாதேஷ் தென்னாபிரிக்கா மே.தீவுகள் ஸ்கொட்லாந்து இங்கிலாந்து ஆகிய அணிகளும் பங்கேற்கின்றன.

இதேவேளை மகளிர் T20 உலகக் கிண்ணத்தை அதிக முறை வென்ற நாடு என்ற பெருமையை அவுஸ்திரேலியா தன்வசம் வைத்துள்ளது. இதுவரையில் 8 முறை நடைபெற்றுள்ள மகளிர் T20 உலகக்கிண்ண தொடரில் 6 முறை சம்பியன் பட்டம் வென்று அவுஸ்திரேலியா அசத்தியுள்ளது. இங்கிலாந்து மற்றும் மே.தீவுகள் தலா 1 முறை வெற்றி பெற்றுள்ளன.

எனினும் இந்த முறை தொடரில் ஆசிய சம்பியன்களான இலங்கை மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ஆசியக்கிண்ண தொடரை வென்ற இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள பல வீராங்கனைகள் உலகக்கிண்ண அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

தொடரில் சம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 2.34 மில்லியன் டொலரும், ரன்னர்-அப் (இறுதிப்போட்டியில் தோல்வியடையும்) அணிக்கு 1.17 மில்லியன் டொலரும், அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளுக்கு 6 இலட்சத்து 75 ஆயிரம் டொலரும் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய முதல் நாளில் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் முதல் ஆட்டத்தில் பங்களாதேஷ் - ஸ்கொட்லாந்து அணிகள் மோதுகின்றன.

இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ஷார்ஜாவில் நடைபெறும் இந்த ஆட்டம் இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகிறது. இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இறுதியாக ஆசியக்கிண்ண அரையிறுதியில் மோதியதில் இலங்கை அணி கடைசிப் பந்தில் த்ரில் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உலகக்கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாமில் - சமரி அத்தபத்து (தலைவி), ஹர்ஷிதா சமரவிக்ரம, விஷ்மி குணரத்ன, கவிஷா டில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, ஹாசினி பெரேரா, அனுஷ்கா சஞ்சீவனி, சச்சினி நிசன்சலா, உதேஷிகா பிரபோதனி, இனோஷி பெர்னாண்டோ, அச்சினி குலசூரிய, இனோகா ரணவீர, ஷஷினி கிம்ஹானி, அமா கான்சனா, சுகந்திகா குமாரி ஆகியோர் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது

00

  • 934
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads