சினிமா செய்திகள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
Ads
 ·   ·  1399 news
  •  ·  0 friends
  • 1 followers

அடுத்த இரண்டு ஆண்டுகளில், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ரூபாவின் பெறுமதி வலுவடைய வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து

அடுத்த இரண்டு ஆண்டுகளில், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ரூபா வலுவாக இருக்க வேண்டும். ரூபாவை வலுப்படுத்துவதன் மூலமே மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும். எனவே, உண்மையை அறிந்து முன்னேற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தோடு நாங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும். அப்படி இல்லையென்றால் இந்த நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாது எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குருணாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மகாசங்கத்தினரின் ஆலோசனைகளைப் பெற்று தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பது எனது நோக்கமாக இருந்தது. மேலும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் பயணத்தில், மகா சங்கத்தினரின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் நான் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

இக்கட்டான நேரத்தில் இந்த நாட்டை பொறுப்பேற்றேன். 2019ஆம் ஆண்டு நாம் நாட்டைக் கையளிக்கும் போது திறைசேரியில் 07 பில்லியன் டொலர்கள் இருந்தன. ஆனால் 2022 இல் நான் நாட்டை பொறுப்பேற்ற போது அரசாங்கத்திடம் நூறு மில்லியன் டொலர்கள் கூட இருக்கவில்லை.

எரிபொருள், உரம், மருந்து எதுவும் இல்லை. இந்நாட்டின் மக்களால் மகா சங்கத்தினருக்கு அன்னதானம் கூட வழங்க முடியாத நிலை உருவாகியிருந்தது.

அன்று இந்த நாட்டை பொறுப்பேற்கும் நேரத்தில், நான் மகா சங்கத்தினரின் ஆசிகளைப் பெற்றேன். சம்பிரதாய ரீதியில் கட்சிகளை அடிப்படையாகக் கொண்டிராத அரசாங்கத்தை நாங்கள் நிறுவினோம். வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை அனைத்து குழுக்களும் இணைந்து முன்னெடுத்துச் சென்றன.

மேலும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் போது அரசாங்கம் என்ற வகையில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற்று நாட்டின் பொருளாதாரத்தை முதலில் ஸ்திரப்படுத்த முடிந்தது.

இன்று சிலர் 2022 இல் நடந்ததை மறந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தணிக்கும் அதே வேளையில், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் நாங்கள் செயற்பட்டோம். மேலும் எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்கவும் எதிர்பார்த்துள்ளோம்.

ஒரு அரசாங்கம் என்ற வகையில், இந்நாட்டில் துன்பப்படும் மக்களின் உரிமைகளை வழங்குவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். நாம் மேலும் முன்னோ்ககிச் செல்ல வேண்டும். நாட்டை மீட்பதற்காக கடந்த இரண்டு வருடங்களில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காகவே இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறேன்.

சர்வதேச நாணய நிதியத்துடன் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம். அந்தப் பாதையில் நாம் தொடர்ந்து செல்ல வேண்டும். இல்லையேல் இந்த நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாது.

இன்று ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் சிலர் வரியைக் குறைப்பதாகக் கூறுகின்றனர். அவ்வாறு செய்தால் என்ன நடக்கும் ? அவ்வாறானதொரு செயலைச் செய்தால் இந்நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத நிலை உருவாகும்.

நாங்கள் அரசாங்கத்தை அமைத்த பிறகு, அந்நியக் கையிருப்பை அதிகரிக்கச் செய்தோம். ரூபா வலுவடைந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ரூபா வலுவாக இருக்க வேண்டும்.

ரூபாவை வலுப்படுத்துவதன் மூலமே மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும். எனவே, உண்மையை அறிந்து முன்னேற வேண்டும். மீண்டும் பொய்யான பிரச்சாரங்களில் ஏமாற வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

000

  • 1716
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads