சினிமா செய்திகள்
மும்பையில் புதுவீடு வாங்கினார் டாப்ஸி
பாலிவுட் நடிகை டாப்ஸி மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இது அவரும் அவரது சகோதரி சகுன் பன்னுவும் இணைந்து வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு ஆகு
பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது
ஐரோப்பாவில் நடைபெறும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டி நெதர்லாந்தில் மே 17ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது. போர்ஷ்
நடிகை ருக்மிணியின் காரில் இருந்து நகைகள் திருட்டு
நடிகை ருக்மிணி விஜயகுமாரின் காரில் இருந்து வைர மோதிரங்கள் உட்பட ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், கப்பன் பார்க் காவல்துறையினர் ம
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
Ads
 ·   ·  2994 news
  •  ·  1 friends
  • 2 followers

உலக நாடுகளுக்கு நம்பிக்கை ஒளியாக இந்தியா திகழ்கிறது - பிரதமர் மோடி புகழாரம்

உலகளவில் ஸ்திரமற்ற சூழ்நிலையிலும், உலக நாடுகளுக்கு நம்பிக்கை ஒளியாக இந்தியா திகழ்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்த பட்ஜெட்டிற்கு பிந்தைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, சர்வதேச அளவில், ஸ்திரமற்ற சூழ்நிலையில் மத்தியிலும் நம்பிக்கைக்கான ஒளிவிளக்காக இந்தியா திகழ்கிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8% ஆக உள்ளது. உலக பொருளாதாரத்தில் 3வது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. கோவிட் பெருந்தொற்றை சமாளித்து நாட்டை புது உயரத்திற்கு கொண்டு சென்றோம்.

சர்வதேச பொருளாதாரத்தில் 16 சதவீதம் இந்தியாவுடையது. உலகளவில் அதிக வளர்ச்சி, குறைந்த பணவீக்கம் கொண்ட நாடு இந்தியா மட்டுமே.

3 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறி வருகிறோம். தினமும் புதிய மைல்கல்லை இந்தியா எட்டுகிறது. சிறு குறு நடுத்தர தொழிலுக்கு பட்ஜெட்டில் ஊக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பட்ஜெட்டும் 3 மடங்கு அதிகரித்து ரூ.48 இலட்சம் கோடியாக உள்ளது. 2004 ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது மூலதன செலவு ரூ.90 ஆயிரம் கோடியாக இருந்தது. பிறகு 2 லட்சம் கோடி ரூபாய் ஆக அதிகரித்தது. தற்போது, 5 மடங்கு அதிகரித்து ரூ.11 லட்சம் கோடியாக உள்ளது.

வரி விகிதங்கள் குறைக்கப்பட்ட போதும், அமைச்சகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரித்து உள்ளது. உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் அரசின் பணியும் செயல்களும் முன் எப்போதும் இல்லாதது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும் போது, ரயில்வே பட்ஜெட் 8 மடங்கும், நெடுஞ்சாலைக்கான பட்ஜெட் 8 மடங்கு, விவசாய பட்ஜெட் 4 மடங்கும், பாதுகாப்பு பட்ஜெட் 2 மடங்கும் அதிகரித்து உள்ளது.

பா.ஜ.க, ஆட்சியில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, எளிதான வாழ்க்கை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம். இன்று இந்தியாவில் 1.40 இலட்சம் ஸ்டார்ட் அப்கள் உள்ளன. 8 கோடி பேர் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்று தொழில் துவங்கி உள்ளனர்.

வளர்ந்த பாரதம் என்பது நமக்கு இன்றியமையாதது. இந்த பயணத்தில் நாடு தொடர்ந்து முன்னேறுகிறது. வளர்ச்சியடைந்த பாரதம் மீது முழு கவனம் செலுத்தி வருகிறோம். இதில் தெளிவான நோக்கமும், அர்ப்பணிப்பும் கொண்டுள்ளோம். சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தியா நோக்கி வருகின்றனர். இது தொழில்துறைக்கு வரும் பொன்னான வாய்ப்பு. இதனை தவற விடக்கூடாது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

  • 343
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads