சினிமா செய்திகள்
மும்பையில் புதுவீடு வாங்கினார் டாப்ஸி
பாலிவுட் நடிகை டாப்ஸி மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இது அவரும் அவரது சகோதரி சகுன் பன்னுவும் இணைந்து வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு ஆகு
பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது
ஐரோப்பாவில் நடைபெறும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டி நெதர்லாந்தில் மே 17ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது. போர்ஷ்
நடிகை ருக்மிணியின் காரில் இருந்து நகைகள் திருட்டு
நடிகை ருக்மிணி விஜயகுமாரின் காரில் இருந்து வைர மோதிரங்கள் உட்பட ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், கப்பன் பார்க் காவல்துறையினர் ம
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
Ads
 ·   ·  2994 news
  •  ·  1 friends
  • 2 followers

தமிழ் பொது வேட்பாளர் விடயம் - தோல்விக் கலக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே தவிர தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கானதல்ல - ரங்கேஸ்வரன்!

ஏழு கட்சிகள் சிவில் அமைப்புகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் எனக் கூறப்படுவது தோல்விக் கலக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே தவிர தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான ஒப்பந்தம் அல்ல என ஈழ மக்கள் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (30.07.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

சமீபத்தில் சிவில் அமைப்பபுகள் என்று கூறிக்கொள்பவர்களும் சிதறுண்டுபோய் இருக்கின்ற ஏழு குழுக்களும் செய்துகொண்ட ஒப்பந்தமானது மாறிமாறி வந்த அரசுகள் தமிழ் மக்களை ஏமாற்றியது என்பதற்கு அப்பால் இவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றினார்கள் என்பதற்கான உதாரணமாகும்.

இரண்டு நாடுகள் ஒப்பந்தம் செய்வதும் இரண்டு இனம், இரண்டு சமயத்தவர்கள் இரண்டு பிரிவினர் தங்களுக்குள் இணக்கமற்ற சூழல் நிலவுகின்றபோது பொது உடன்படிக்கை செய்துகொள்வது இயல்பானது.

அனால் இங்கு ஏழு குழுக்கள் கட்சியாகவும், சிவில் சமூகத்தவர்கள் என்ற சிலரும் இவ்வாறு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு பெரிதாக ஓர் ஒப்பந்தம் செய்தகொண்டதாக புழகாங்கிதம் அடைந்துவருகின்றனர்.

தமக்குள் ஒற்றுமையின்மை நிலவுவதால் பொது வேட்பாளரை நிறுத்துவதனூடாக சிதறுண்டிருக்கின்ற கட்சிகளை ஒற்றுமைப்படுத்தலாம் என புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனும், சி.வி.விக்னேஸ்வரனும் ஏற்கனவே ஊடகங்களுக்கு தெரிவித்ததன் பின்னர் இப்போது சிவில் அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமத் செய்ததாகவும் ஏதோ இணக்கப்பாடில்லாத இரு தரப்பினரை ஒருநிலைப்படுத்திய பிரமிதத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆகவே அடுத்தவருடன் நடுப்பகுதிக்கு பின்னர் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை இலக்குவைத்தே உதிரிகள் எல்லாவற்றையும் ஓரணியில் திரட்ட அரங்கேற்றிய நாடகமே தவிர இதனால் தமிழ் மக்கள் இவர்களது சகட்டு மேனி பேச்சுக்களை கண்டுகொள்ள தயாரில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

0000

  • 439
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads