Category:
Created:
Updated:
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 253 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 9,282 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பொதுமக்கள் இன்றைய தினமும் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும் என தெரிவித்தார்.வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு அனுமதி உள்ளதாகவும் எனினும், இன்று மற்றும் நாளைய தினங்களில் அடையாள அட்டையை பயன்படுத்தி வௌியில் வர முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.