சினிமா செய்திகள்
நடிகை ருக்மிணியின் காரில் இருந்து நகைகள் திருட்டு
நடிகை ருக்மிணி விஜயகுமாரின் காரில் இருந்து வைர மோதிரங்கள் உட்பட ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், கப்பன் பார்க் காவல்துறையினர் ம
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
Ads
 ·   ·  8230 news
  •  ·  5 friends
  • I

    9 followers

சர்வதேச சரக்கு கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே போர் கப்பலை அனுப்புகின்றோம் - ஜனாதிபதி

செங்கடல் ஊடாக இலங்கை வரும் சரக்கு கப்பல்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலானால் கொழும்பு துறைமுகம் உட்பட நாட்டின் அனைத்து துறைமுகங்களின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு, இறக்குமதி பொருட்களின் விலை அதிகரித்து விடும் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச சரக்கு கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே போர் கப்பலை அனுப்புகின்றோம், மாறாக இரு நாட்டின் போரில் பங்குதாரர்களாக அல்ல எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அலுவலத்தில் திங்கட்கிழமை (8) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தன்.செங்கடல் ஊடாக இலங்கை வரும் சரக்கு கப்பல்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலானால கொழும்பு துறைமுகம் உட்பட நாட்டின் அனைத்து துறைமுகங்களும் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும். எனவே பன்னாட்டு சரக்கு கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.எனவே தான் இலங்கை கடற் படையின் போர் கப்பலை செங்கடலின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அனுப்புவதற்கு ஆலோசனை வழங்கினேன். மஹா பராக்கிரமபாகு மன்னரின் ஆட்சி காலத்திற்பு பின்னர் சர்வதேச கடலில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை போர் கப்பலை அனுப்புவது இதுவே முதல் தடவையாகும்.செங்கடல் பாதுகாப்புக்கான செலவீணங்களை கருதி நாம் விலகினால் இலங்கைக்கு சர்வதேச கப்பல்களின் வருகை குறைந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே செங்கடலில் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து சுமூகமாக இடம்பெறுவதை உறுதி செய்வதற்காக போர் கப்பலை அனுப்புகின்றோம்.மாறாக இரு நாடுகளுக்கு இடையிலான போரில் ஒருதரப்புக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இலங்கை செங்கடலுக்கு கப்பலை அனுப்ப வில்லை. பிராந்தியத்தின் முக்கிய நாடுகள் பலவும் செங்கடல் ஊடான பன்னாட்டு சரக்கு கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக தனது போர் கப்பல்களை ஏற்கனவே அனுப்பியுள்ளன. ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகள் காரணமாக பல சர்வதேச சரக்கு கப்பல்கள் செங்கடல் ஊடான போக்குவரத்தை பயன்படுத்தாது வேறு கடல் மார்க்கங்களை பயன்படுத்துகின்றன. இதனால் கடல் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளன.கொழும்பு துறைமுகத்திற்கு செங்கடல் ஊடாக நேரடியாக வர வேண்டிய கப்பல்கள் தென் ஆபிரிக்காவை சுற்றிவரும் போது, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த பிரச்சினையை எளிதானதொரு விடயமாக கருத முடியாது.ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எரிபொருள் கப்பல் ஒன்று வரும் வரை காத்திருந்த இலங்கை, இன்று சர்வதேச கடல் பாதுகாப்புக்கு கப்பலை அனுப்பும் அளவிற்கு வளர்ந்துள்ளது. எனவே ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக செங்கடலில் இலங்கை கடல் படையின் போர் கப்பலும் சிறப்பு படையினரும் செயல்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.

  • 385
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads