சினிமா செய்திகள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
Ads
 ·   ·  7916 news
  •  ·  5 friends
  • I

    9 followers

சர்வதேச சரக்கு கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே போர் கப்பலை அனுப்புகின்றோம் - ஜனாதிபதி

செங்கடல் ஊடாக இலங்கை வரும் சரக்கு கப்பல்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலானால் கொழும்பு துறைமுகம் உட்பட நாட்டின் அனைத்து துறைமுகங்களின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு, இறக்குமதி பொருட்களின் விலை அதிகரித்து விடும் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச சரக்கு கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே போர் கப்பலை அனுப்புகின்றோம், மாறாக இரு நாட்டின் போரில் பங்குதாரர்களாக அல்ல எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அலுவலத்தில் திங்கட்கிழமை (8) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தன்.செங்கடல் ஊடாக இலங்கை வரும் சரக்கு கப்பல்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலானால கொழும்பு துறைமுகம் உட்பட நாட்டின் அனைத்து துறைமுகங்களும் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும். எனவே பன்னாட்டு சரக்கு கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.எனவே தான் இலங்கை கடற் படையின் போர் கப்பலை செங்கடலின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அனுப்புவதற்கு ஆலோசனை வழங்கினேன். மஹா பராக்கிரமபாகு மன்னரின் ஆட்சி காலத்திற்பு பின்னர் சர்வதேச கடலில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை போர் கப்பலை அனுப்புவது இதுவே முதல் தடவையாகும்.செங்கடல் பாதுகாப்புக்கான செலவீணங்களை கருதி நாம் விலகினால் இலங்கைக்கு சர்வதேச கப்பல்களின் வருகை குறைந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே செங்கடலில் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து சுமூகமாக இடம்பெறுவதை உறுதி செய்வதற்காக போர் கப்பலை அனுப்புகின்றோம்.மாறாக இரு நாடுகளுக்கு இடையிலான போரில் ஒருதரப்புக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இலங்கை செங்கடலுக்கு கப்பலை அனுப்ப வில்லை. பிராந்தியத்தின் முக்கிய நாடுகள் பலவும் செங்கடல் ஊடான பன்னாட்டு சரக்கு கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக தனது போர் கப்பல்களை ஏற்கனவே அனுப்பியுள்ளன. ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகள் காரணமாக பல சர்வதேச சரக்கு கப்பல்கள் செங்கடல் ஊடான போக்குவரத்தை பயன்படுத்தாது வேறு கடல் மார்க்கங்களை பயன்படுத்துகின்றன. இதனால் கடல் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளன.கொழும்பு துறைமுகத்திற்கு செங்கடல் ஊடாக நேரடியாக வர வேண்டிய கப்பல்கள் தென் ஆபிரிக்காவை சுற்றிவரும் போது, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த பிரச்சினையை எளிதானதொரு விடயமாக கருத முடியாது.ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எரிபொருள் கப்பல் ஒன்று வரும் வரை காத்திருந்த இலங்கை, இன்று சர்வதேச கடல் பாதுகாப்புக்கு கப்பலை அனுப்பும் அளவிற்கு வளர்ந்துள்ளது. எனவே ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக செங்கடலில் இலங்கை கடல் படையின் போர் கப்பலும் சிறப்பு படையினரும் செயல்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.

  • 304
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads