Category:
Created:
Updated:
வெளிநாடுகளில் இருந்து அரிசி மற்றும் சோளத்தை இறக்குமதி செய்து நாட்டின் விவசாயத்தை அழிக்கவே அரசாங்கம் முயற்சித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கீரி சம்பா அரிசிக்கு இணையான அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், இந்த அரிசி ஒரு வகை நச்சுத் தன்மை வாய்ந்த அரிசி என்றும் இந்த அரிசியில் கட்மியம், ஈயம் மற்றும் இரச கூறுகள் அடங்கியுள்ளதாகவும், தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்தது போன்று தரமற்ற அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்