Category:
Created:
Updated:
மதுபோதையில் வந்த நபர் மருதங்கேணியில் விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்க முற்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மருதங்கேணி நித்தியவெட்டை பகுதிக்கு கடமை நிமித்தம் தனது மோட்டார் சைக்கிளில் சென்று , மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்தி விட்டு, வீடொன்றில் விசாரணை நடவடிக்கையை மேற்கொண்ட போது , வீதியில் நின்ற மோட்டார் சைக்கிளுக்கு மதுபோதையில் வந்த நபர் தீ வைக்க முற்பட்டுள்ளார்.
இதனை பொலிஸ் உத்தியோகத்தர் அவதானித்ததும் குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளார். விரைந்து சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் தீயை அணைத்துள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிளின் என்ஜின் பகுதி சிறிதளவு சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.