சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 2024 வரவு - செலவு திட்டத்தினை சமர்ப்பித்துள்ளோம் -: ஜனாதிபதி

வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும்  வேளையிலும், நாட்டு மக்களின் நலிவடைந்த வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நிகழ்நிலை முறையில் "உலக தெற்கின் குரல்" அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு கடந்த வெள்ளிக்கிழமை (17) ஆற்றிய உரையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த மாநாடு இரண்டாவது முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவில் ஆரம்பமானது. அபிவிருத்தி அடைந்துவரும் பல நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.  

மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தமைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தமைக்காக இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்தார்.  

முதல் முறையாக நடைபெற்ற "உலக தெற்கின் குரல்" மாநாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் தலைமைத்துவத்தையும், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் முன்னுரிமைகள் தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதால் கிடைக்கக்கூடிய முன்னேற்றகரமான தாக்கத்தையும் வரவேற்றார்.  

இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ்  நடைபெற்ற G20 உச்சிமாநாட்டின் வெற்றியை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அதனால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் முன்னுரிமைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடிந்ததாகவும் தெரிவித்தார்.  

இலங்கையின் பொருளாதார முன்னேற்றம்  தொடர்பில் விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து முதலாம் தவணைக் கடனைப் பெற்றுக்கொண்டமை மற்றும் இலங்கையின் இருதரப்புக் கடன் தொடர்பாக உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவினால் அடைந்த முன்னேற்றங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டினார்.  

படுகடன் தொடர்பிலான பிரச்சினைகளின் கடினத் தன்மையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கான நிலையான தீர்வுகளை காண கடன் வழங்குநர்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும் இடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீண்டகால வளர்ச்சிக்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது, உறவுகளை மேம்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

  • 245
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads