சினிமா செய்திகள்
மும்பையில் புதுவீடு வாங்கினார் டாப்ஸி
பாலிவுட் நடிகை டாப்ஸி மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இது அவரும் அவரது சகோதரி சகுன் பன்னுவும் இணைந்து வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு ஆகு
பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது
ஐரோப்பாவில் நடைபெறும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டி நெதர்லாந்தில் மே 17ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது. போர்ஷ்
நடிகை ருக்மிணியின் காரில் இருந்து நகைகள் திருட்டு
நடிகை ருக்மிணி விஜயகுமாரின் காரில் இருந்து வைர மோதிரங்கள் உட்பட ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், கப்பன் பார்க் காவல்துறையினர் ம
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
Ads
 ·   ·  13 news
  • 3 members
  • 3 friends

தீபாவளியை கொண்டாட அமெரிக்காவில் இருந்து நெல்லை வந்த தம்பதி விபரீதம்

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடவே பலரும் விரும்புவார்கள். சொந்தபந்தங்களுடன் ஜாலியாபேசி மகிழ்ந்து , பட்டாசு வெடித்து, புத்தாடை அணிந்து உறவினர்கள் கொண்டாடுவதற்கு தீபாவளி நாளில் எங்கிருந்தாலும் சொந்த ஊருக்கு வருகிறார்கள். அப்படி சொந்த ஊர் வந்த அமெரிக்க தம்பதிக்கு பெரும் சோகம் நடந்துள்ளது.

தீபாவளியை கொண்டாட அமெரிக்காவில் இருந்து நெல்லை வந்தவரின் கார் பிரேக் பிடிக்காமல் ஆதிச்சநல்லூர் கால்வாய் பாலம் அருகே கவிழ்ந்தது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

நெல்லை பெருமாள்புரம் என்.எச். காலனி 11-வது குறுக்குத்தெருவை சேர்ந்த 78 வயதாகும் நாகராஜன் எனபவரும் இவரது மனைவி உஷா என்பவரும் அமெரிக்காவில் வசித்து வந்தார்கள். இவர்கள் தீபாவளியை கொண்டாடுவதற்காக விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்கள். திங்கள் அன்று இந்த தம்பதி திருச்செந்தூருக்கு காரில் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். நாகராஜன் உஷா தம்பதியின் கார் ஆதிச்சநல்லூர் கால்வாய் பாலம் அருகே வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. மேலும் பிரேக் பிடிக்காததால் பாலத்தில் மோதிய கார் சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விழுந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த நாகராஜன்-உஷா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்த நாகராஜன்-உஷா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நாகராஜன் பரிதாபமாக இறந்தார். உஷா மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உஷாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • 609
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads