சினிமா செய்திகள்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
Ads
 ·   ·  7914 news
  •  ·  5 friends
  • I

    9 followers

தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரச வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது சம்பந்தமாக பிரதமரின் செயலாளரின் தலைமையில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் (கோபா) நியமிக்கப்பட்ட அடிப்படைத் தொழில்நுட்பக் குழு முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக அண்மையில் கூடியது.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் இந்தத் தொழில்நுட்பக் குழுவின் செயற்பாட்டைப் பாராட்டிய கோபா குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன குறிப்பிடுகையில், 

இந்தக் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையைப் பரிசீலனை செய்ததாகவும், அதற்காக நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

 அத்துடன் இந்தத் தொழில்நுட்பக் குழு எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் கலந்துரையாடுவது இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வருமானத்தை சேகரித்தல், அதிகரித்தல் என்பவற்றுக்கு வினைத்திறனான தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தி பங்குதாரர்களுடன் செயற்படுவது தொடர்பில் இந்தத் தொழில்நுட்பக் குழு 2023.03.23 ஆம் திகதி நியமிக்கப்பட்டது. 

இதனால் 2023 - 2024 ஆண்டுகளில் செயற்படும் நோக்கில் 13 அரச நிறுவங்களினால் இணங்கப்பட்ட செயற்பாட்டுத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அதன் முன்னேற்றம் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அதற்கமைய, உள்நாட்டு வருமானத்தை அதிகரிப்பது தொடர்பில் நாட்டின் முக்கியமான நிறுவனங்கள் தொழிநுட்பரீதியில் கட்டமைக்கப்படுத்தல் முக்கியமானது எனக் கோபா குழு சுட்டிக்காட்டியது. அதேபோன்று, சர்வதேச அளவிலான அறிவு இதற்குத் தேவை எனச் சுட்டிக்காட்டிய கோபா குழு, ஏனைய நாடுகளில் இது எவ்வாறு இடம்பெறுகின்றது என்பது தொடர்பான புரிதலைப் பெற்றுக்கொள்வது முக்கியமானது எனவும் இதன்போது தெரிவித்தது.

அத்துடன், டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மேலும், இந்தத் தொழில்நுட்பக் குழுவுடன் ஒரு மாதத்துக்கு ஒரு முறை கோபா குழு கூடுவது முக்கியமானது என கோபா குழுவின் தலைவர் இராஜங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன சுட்டிக்காட்டினார்.

  • 282
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads