சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

அரச நிறுவனங்களுக்கு இடையிலான மோதல்களால் அபிவிருத்தி திட்டங்கள் தாமதமாகின்றன - பிரசன்ன ரணதுங்க

சீன அரசாங்கத்தின் உதவித் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக எழுமடுவ மற்றும் மஸ்மடுவ காணிகளின் உரிமை தொடர்பில் கொழும்பு மாநகர சபைக்கும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் இடையிலான இழுபறியை உடனடியாக நிறுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இரு தரப்பு அதிகாரிகளிடமும் சனிக்கிழமை (28) பணிப்புரை விடுத்தார்.இவ்விடயம் தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடி புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு வர வேண்டுமென அமைச்சர் அங்கு வலியுறுத்தினார்.அப்போது இரு நிறுவனங்களும் தங்கள் மீது நம்பிக்கை வைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எழுமடுவ மற்றும் மஸ்மடுவ காணிகளின் உரிமை கொழும்பு மாநகர சபைக்கே இருந்தது.ஆனால் வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இரண்டு காணிகளும் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 2019 இல் தமது நிறுவனத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டது. அது நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் பிரிவு 50 இன் படியாகும்.இதற்கு எதிராக கொழும்பு மாநகர சபை சட்ட நடவடிக்கை எடுத்திருந்தது.அங்கு, இரண்டு நிறுவனங்களும் அரசு நிறுவனங்கள் என்பதால், சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என, நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. குறித்த வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்குமாறும் சீன அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது.குறித்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைப்பதற்காக சனிக்கிழமை (28) பத்தரமுல்லை, செத்சிரிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக்க அவர்களின் பங்களிப்புடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அரச நிறுவனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் காரணமாக அபிவிருத்தி திட்டங்கள் மிகவும் தாமதமாகி வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அங்கு குறிப்பிட்டார். இவ்வாறான கருத்து முரண்பாடுகளினால் சில சமயங்களில் அபிவிருத்தி திட்டங்கள் நாட்டுக்கு இழக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அப்போது அரசியல் அதிகாரத்தின் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.இவ்வாறான செயற்பாடுகள் நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் அநீதியாகும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்காக செயல்படுகின்றன. எனவே, சட்டங்கள், கட்டளைகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் சிக்கிக் கொள்ளாமல் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அரச நிறுவனங்கள் செயற்பட வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.

  • 280
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads