சினிமா செய்திகள்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
Ads
 ·   ·  7914 news
  •  ·  5 friends
  • I

    9 followers

அமைச்சர் மனுஷ, ஹரினின் மனுக்கள் விசாரணை

அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் சமர்ப்பித்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (12) உயர் நீதிமன்றில் ஆரம்பமானது.

ஐக்கிய மக்கள் சக்தி தமது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யும் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்து உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

விஜித் மலல்கொட, அசல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணை நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தி தனது கட்சிக்காரரை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என   மனுஷ நாணயக்கார சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பின் படி, கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் செயற்குழுவிற்கு மட்டுமே உள்ளது, மேலும் கட்சியின் உறுப்பினர் பதவியை பறிக்கும் அதிகாரம் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவுக்கோ அல்லது கட்சியின் தலைமைக்கோ கிடையாது.

கட்சியின் யாப்பை மீறும் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணைகளை நடத்துவது மாத்திரமே கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவிற்கு கடமைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி  சட்டத்தரணி தெரிவித்தார்.

கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக மாவட்ட நீதிமன்றில் தடை உத்தரவு பெற்றிருந்த நிலையில், கட்சியின் செயலாளர் நாயகத்தின் அறிவித்தலுக்கு அமைய அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், கட்சியின் செயற்குழு அந்த நடவடிக்கையை அங்கீகரிக்கவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.

முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்கி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்த வழக்கிற்கு சிறிதும் பொருந்தாது என ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா மேலும் தெரிவித்துள்ளார். அதன்பின், மனு மீதான விசாரணைகள் எதிர்வரும், 24ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

  • 228
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads