சினிமா செய்திகள்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
Ads
 ·   ·  7914 news
  •  ·  5 friends
  • I

    9 followers

இணையத்தில் கடன் வழங்கும் போலி செயலிகள் குறித்து எச்சரிக்கை

இணையம் ஊடாக கடன் வழங்கும் போலி செயலிகள் குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இணையம் ஊடாக உடனடியாக கடன் வழங்குனர்களுக்கு தனிப்பட்ட விவரங்களை வழங்க வேண்டாம் என தெரிவித்துள்ளது.

"இணையம் ஊடாக கடன் வழங்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன, மேலும் அந்த நிறுவனங்களுக்கு தங்கள் விவரங்களை வழங்க வேண்டாம் என மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொலதெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த மோடி தொடர்பாக கடந்த மாதங்களில் 100 முறைப்பாடுகள் கிடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளைக் காட்டிலும் குறைவான வட்டி விகிதங்களை வழங்குவதாகவும், ஆவணங்கள் மட்டுமே தேவை என தெரிவிப்பதாலும் மக்கள் கடன் மோசடிகளுக்கு இரையாகிறார்கள்.

5000 ரூபா முதல் 10 இலட்சம் ரூபா வரை குறைந்த வட்டியுடன் கடன் தொகை வழங்கப்படுகிறது.

குறித்த நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் இணைப்பு மூலம் தங்களுடன் பதிவு செய்யுமாறு மக்களைக் கேட்டுக் கொள்வதோடு, கைத்தொலைபேசிகளின் தங்களின் செயலியை பதிவிறக்க அறிவுறுத்துகின்றன.

அந்த செயலி, பயனருடைய கோப்புகள், தொடர்பு எண்கள், அழைப்புப் பதிவுகள் போன்ற கைத்தொலைபேசி ஆதாரங்களை அணுக அனுமதி கேட்கும்.

அதற்கான அனுமதியை பயனர் கொடுத்தவுடன், பதிவு செய்யப்பட்டுள்ள எண்களை அந்தச் செயலி பெற்றுவிடும். இது போல் கைத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ள எண்களை அணுகி கடன் செயலிகள், கடன் பெற்றவரை மிரட்டும் நோக்குடன், அவர்கள் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தவில்லை என்ற தகவலை அவர்களுடன் தொடர்புடைய எண்களுக்கு முறைபப்பாடு செய்யும். அத்தோடு, கடனை செலுத்ததும் வரை அவர்களை தொந்தரவு செய்யும் அதே வேளையில் அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.

எனவே,இதுபோன்ற இணையம் ஊடான கடன்களுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்பதோடு, செயலிகளை பதிவிறக்க வேண்டாம் என இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு வலியுறுத்தியுள்ளளது.

குறித்த செயலியை பதிவிறக்கம் செய்து இருந்தால் கைத் தொலைபேசியை மீட்டமைக்க (reset) வேண்டும். அதில் பழைய பயன்பாடுகளை மீட்டெடுக்க வேண்டாம். இந்த செயலி நீக்குவதால் (Uninstalling) மாத்திரம் தனிப்பட்ட தரவுகளுக்கான அணுகலை தடுக்க முடியாது.

தனிப்பட்ட தரவு பாதுகாப்பின் இரு காரணி அங்கீகாரத்துடன் (two-factor authentication) பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

  • 177
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads