சினிமா செய்திகள்
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
ஜெயம் ரவி மீது மனைவி ஆர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு
தனது மனைவியுடன் விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அந்த அறிக்கைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டு
கோட் படத்தில் நடிப்பதற்காக பிரபுதேவா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கி வருகிறார். அவர் படம் என்றாலே தமிழகம் முழுவதும் திருவிழா கோலமாக இருக்கும். அதிலும் வி
நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட புகைப்படம்
பாலிவுட் நடிகையான ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்தடுத்து படங்களில் தோன்றிய அவர், தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள்
கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா
நடிகர் ஜீவா தனது குடும்பத்தினருடன் சின்ன சேலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருடைய கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இரு சக்கர வாகனம் குறுக்கே வந்தத
மனைவியை விவகாரத்து செய்கிறார் நடிகர் ஜெயம் ரவி
பிரபல நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் திருமணம் செய்து கொண்டனர். ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்ட
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் காலமானார்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் தனது 93ஆவது வயதில் காலமானார். இவர் ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் டார்த் வேடர் என்ற வில்லன் கதாபாத்திரத்திற்க
Ads
 ·   ·  7908 news
  •  ·  5 friends
  • I

    9 followers

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை மகள் பாசத்தில்......

அப்பாக்களுக்கு மகள்கள் எப்போதுமே தேவதைகள்தான். மகள்களுக்கு ஆண் தேவதை, தன்னுடைய அப்பா மட்டுமே. சாதாரணமாக ஒரு வீட்டில் அம்மாவுக்கு மகன்களும், அப்பாவுக்கு மகள்களும் செல்லப்பிள்ளைகளாக இருப்பது வழக்கம் தான். இருந்தாலும், உலகில் மற்ற உறவுகளைவிட அப்பா - மகள் உறவு அதிகம் கொண்டாடப்படுகிறது. 

அப்படிப்பட்ட மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு இன்னொருவர் கையில் கொடுப்பது அப்பாக்களுக்கு மிகுந்த வேதனைதான். மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டு மருமகனின் கையை பிடித்து கொண்டு தந்தை கதறி அழும் வீடியோ மனதை உருக்குவதாக இருக்கிறது. 

திருமணம் முடிந்தவுடன் மருமகனின் கையை பிடித்து கொண்டு அப்பெண்ணின் தந்தை அழுது கொண்டே, என்றாவது ஒரு நாள் உன் மனதில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், என் மகளை நேசிப்பதை நிறுத்தினால், அவளை புண்படுத்தாதே, அவளை என்னிடம் திரும்ப கொடுத்துவிடு. அவளை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்சி கேட்கிறார். 

அதுபோல் நடக்காது என்று மருமகன் மாமனாருக்கு ஆறுதல் கூறுகிறார். என் அருமை மகள் இப்போது உன்னுடையவள் என்று மாமனார் தனது மகளின் கையை மருமகன் கையில் கொடுத்து உணர்ச்சி வசப்படுகிறார். இந்த நேரத்தில் மருமகன் மற்றும் மகள் என இருவரும் உணர்ச்சிவசப்பட, மாமனார் மற்றும் மருமகன் ஒருவரையொருவர் இறுக கட்டிப்பிடித்து உணர்ச்சிவசப்படுகின்றனர். 

திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களும் மணப்பெண்ணின் அழுகையை பார்த்து அவர்களும் நெகிழ்ச்சி அடைந்து அழுகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். உனக்கு வேண்டாம் என்றால் என் மகளை திருப்பி கொடு என்று தந்தை கூறியதை கேட்டு உணர்ச்சிவசப்பட்டதாக பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர். 

இப்படியொரு தந்தை கிடைத்தது பாக்கியம் என்று ஒருவரும், மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் ஒவ்வொரு தந்தையும் தன் மருமகனிடம் இதை கூற வேண்டும் என சமூகதளவாசிகள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

கடந்த ஜூன் மாதம் 18 -ம் தேதி வெளியிடப்பட்ட இந்த வீடியோவில் டிக்டாக் பயனரான கைலி யோ தனது தலைப்பில் என் அப்பா அழுவதை நான் முதன்முறையாக பார்த்தேன் என்று எழுதி உள்ளார். ஏசியன் ஒன் செய்திக்கு பேட்டி அளித்த கைலி, சிங்கப்பூரில் 2021 இல் கோவிட்-19 -ன் போது திருமணம் நடந்ததாக அவர் பகிர்ந்து கொண்டார்.

  • 296
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads