சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ராஜஸ்தான் பெண் கணவனை கைவிட்டு பாகிஸ்தான் சென்றார்

உத்தரபிரதேச மாநிலம் கெய்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சு (வயது 34). இவருக்கு ராஜஸ்தானை சேர்ந்த அரவிந்த் என்பவருன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர். 

அஞ்சு தனது குடும்பத்துடன் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் பிஹ்வாடி பகுதியில் வசித்து வந்தார். இந்த சூழ்நிலையில் அஞ்சுக்கு பேஸ்புக் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா (வயது 29) என்ற நபருடன் 2019-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 

தனது கணவர், குழந்தைகளை கைவிட்ட அஞ்சு தனது காதலன் நஸ்ருல்லாவை பார்க்க பாகிஸ்தான் சென்றுள்ளார். முறையாக விசா பெற்று கடந்த 20-ம் தேதி அஞ்சு பாகிஸ்தான் சென்றார். அங்கு அவர் தனது காதலன் நஸ்ருல்லாவை சந்தித்துள்ளார். 

தற்போது அஞ்சு பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் அப்பர் டிர் மாவட்டம் குல்ஷொ கிராமத்தில் உள்ள தனது காதலன் நஸ்ருல்லாவின் வீட்டில் வசித்து வருகிறார். தான் சுற்றுலா தலங்களை பார்க்க பாகிஸ்தான் சென்றுள்ளதாகவும், நஸ்ருல்லாவை திருமணம் செய்ய செல்லவில்லை என்றும் ஒரிரு நாட்களில் இந்தியா திரும்பிவிடுவேன் என்றும் அஞ்சு நேற்று தெரிவித்திருந்தார். 

\

இந்து மதப்பெண்ணான அஞ்சு இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனது காதலனான பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லாவை இன்று திருமணம் செய்துகொண்டுள்ளார். இஸ்லாமிய மதத்திற்கு மாறிய அஞ்சு தனது பெயரை பாத்திமா என மாற்றிக்கொண்டு நஸ்ருல்லாவை திருமணம் செய்துகொண்டார். அஞ்சு பாத்திமா என்ற பெயரில் மதம்மாறிய பின் அப்பர் டிர் மாவட்டம் கோர்ட்டில் நஸ்ருல்லா குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நஸ்ருல்லா - அஞ்சு (பாத்திமா) திருமணம் நடைபெற்றது. 

இந்திய பெண் அஞ்சு இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனது பெயரை பாத்திமா என்று மாற்றிக்கொண்டதாகவும், நஸ்ருல்லா பாத்திமாவை திருமணம் செய்துகொண்டதாகவும் அப்பகுதி போலீஸ் அதிகாரி நசீர் முகமது தெரிவித்தார். 

இருவரும் தங்கள் முழு விருப்பத்தின் பெயரிலேயே திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்தனர். அதேபோல், பாத்திமா என்ற பெயருடன் மதம் மாறிய அஞ்சு தான் விருப்பப்பட்டே பாகிஸ்தான் வந்ததாகவும், இங்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கோர்ட்டில் தெரிவித்தார்.

நஸ்ருல்லா - பாத்திமாவின் திருமணம் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கோர்ட்டில் நடைபெற்ற நிலையில் பின்னர் அனைவரும் போலீஸ் பாதுகாப்புடன் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற மஞ்சு மதம் மாறி பாத்திமா என்ற பெயரில் காதலன் நஸ்ருல்லாவை திருமணம் செய்துகொண்ட நிலையில் பாகிஸ்தானில் வசிக்க மஞ்சுவுக்கு வழங்கப்பட்ட விசா அடுத்த மாதம் 20ம் தேதியுடன் காலாவதியாக உள்ளது. 

விசா காலாவதியாகும் பட்சத்தில் அவர் இந்தியா திருப்பி அனுப்பப்படுவார் அல்லது அவரின் விசா காலத்தை நீட்டித்து நிரந்தரமாக பாகிஸ்தானில் வாழ அந்நாட்டு அரசு அனுமதி வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  • 394
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads