சினிமா செய்திகள்
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
ஜெயம் ரவி மீது மனைவி ஆர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு
தனது மனைவியுடன் விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அந்த அறிக்கைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டு
கோட் படத்தில் நடிப்பதற்காக பிரபுதேவா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கி வருகிறார். அவர் படம் என்றாலே தமிழகம் முழுவதும் திருவிழா கோலமாக இருக்கும். அதிலும் வி
நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட புகைப்படம்
பாலிவுட் நடிகையான ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்தடுத்து படங்களில் தோன்றிய அவர், தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள்
கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா
நடிகர் ஜீவா தனது குடும்பத்தினருடன் சின்ன சேலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருடைய கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இரு சக்கர வாகனம் குறுக்கே வந்தத
மனைவியை விவகாரத்து செய்கிறார் நடிகர் ஜெயம் ரவி
பிரபல நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் திருமணம் செய்து கொண்டனர். ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்ட
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் காலமானார்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் தனது 93ஆவது வயதில் காலமானார். இவர் ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் டார்த் வேடர் என்ற வில்லன் கதாபாத்திரத்திற்க
Ads
 ·   ·  7908 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ராஜஸ்தான் பெண் கணவனை கைவிட்டு பாகிஸ்தான் சென்றார்

உத்தரபிரதேச மாநிலம் கெய்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சு (வயது 34). இவருக்கு ராஜஸ்தானை சேர்ந்த அரவிந்த் என்பவருன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர். 

அஞ்சு தனது குடும்பத்துடன் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் பிஹ்வாடி பகுதியில் வசித்து வந்தார். இந்த சூழ்நிலையில் அஞ்சுக்கு பேஸ்புக் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா (வயது 29) என்ற நபருடன் 2019-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 

தனது கணவர், குழந்தைகளை கைவிட்ட அஞ்சு தனது காதலன் நஸ்ருல்லாவை பார்க்க பாகிஸ்தான் சென்றுள்ளார். முறையாக விசா பெற்று கடந்த 20-ம் தேதி அஞ்சு பாகிஸ்தான் சென்றார். அங்கு அவர் தனது காதலன் நஸ்ருல்லாவை சந்தித்துள்ளார். 

தற்போது அஞ்சு பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் அப்பர் டிர் மாவட்டம் குல்ஷொ கிராமத்தில் உள்ள தனது காதலன் நஸ்ருல்லாவின் வீட்டில் வசித்து வருகிறார். தான் சுற்றுலா தலங்களை பார்க்க பாகிஸ்தான் சென்றுள்ளதாகவும், நஸ்ருல்லாவை திருமணம் செய்ய செல்லவில்லை என்றும் ஒரிரு நாட்களில் இந்தியா திரும்பிவிடுவேன் என்றும் அஞ்சு நேற்று தெரிவித்திருந்தார். 

\

இந்து மதப்பெண்ணான அஞ்சு இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனது காதலனான பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லாவை இன்று திருமணம் செய்துகொண்டுள்ளார். இஸ்லாமிய மதத்திற்கு மாறிய அஞ்சு தனது பெயரை பாத்திமா என மாற்றிக்கொண்டு நஸ்ருல்லாவை திருமணம் செய்துகொண்டார். அஞ்சு பாத்திமா என்ற பெயரில் மதம்மாறிய பின் அப்பர் டிர் மாவட்டம் கோர்ட்டில் நஸ்ருல்லா குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நஸ்ருல்லா - அஞ்சு (பாத்திமா) திருமணம் நடைபெற்றது. 

இந்திய பெண் அஞ்சு இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனது பெயரை பாத்திமா என்று மாற்றிக்கொண்டதாகவும், நஸ்ருல்லா பாத்திமாவை திருமணம் செய்துகொண்டதாகவும் அப்பகுதி போலீஸ் அதிகாரி நசீர் முகமது தெரிவித்தார். 

இருவரும் தங்கள் முழு விருப்பத்தின் பெயரிலேயே திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்தனர். அதேபோல், பாத்திமா என்ற பெயருடன் மதம் மாறிய அஞ்சு தான் விருப்பப்பட்டே பாகிஸ்தான் வந்ததாகவும், இங்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கோர்ட்டில் தெரிவித்தார்.

நஸ்ருல்லா - பாத்திமாவின் திருமணம் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கோர்ட்டில் நடைபெற்ற நிலையில் பின்னர் அனைவரும் போலீஸ் பாதுகாப்புடன் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற மஞ்சு மதம் மாறி பாத்திமா என்ற பெயரில் காதலன் நஸ்ருல்லாவை திருமணம் செய்துகொண்ட நிலையில் பாகிஸ்தானில் வசிக்க மஞ்சுவுக்கு வழங்கப்பட்ட விசா அடுத்த மாதம் 20ம் தேதியுடன் காலாவதியாக உள்ளது. 

விசா காலாவதியாகும் பட்சத்தில் அவர் இந்தியா திருப்பி அனுப்பப்படுவார் அல்லது அவரின் விசா காலத்தை நீட்டித்து நிரந்தரமாக பாகிஸ்தானில் வாழ அந்நாட்டு அரசு அனுமதி வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  • 301
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads