சினிமா செய்திகள்
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
ஜெயம் ரவி மீது மனைவி ஆர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு
தனது மனைவியுடன் விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அந்த அறிக்கைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டு
Ads
 ·   ·  7914 news
  •  ·  5 friends
  • I

    9 followers

அரசியல் என்பது மக்களுக்காக மட்டுமே - வேலு குமார்

"அரசியல் பலம் தேவை மக்களை அடக்கி ஆள்வதற்கு அல்ல. மக்களுக்கு சேவை செய்வதற்கு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்." என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்."நுவரெலியா மாவட்டத்தின் ரம்பொடை பிரதேசத்தில் தோட்டமொன்றில் உள்ள பல குடும்பங்களை அவர்களது குடியிருப்புகளில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.அதனை நடைமுறைப்படுத்த விசேட அதிரடிப் படையினர் கொண்டு வரப்பட்டுள்ளனர்.இந்த சம்பவத்தோடு அரசாங்கத்தில் உள்ள மலையக பிரதிநிதிகளுக்கு நேரடியாக தொடர்புள்ளது.அரசியல் பலம் தேவை மக்களை அடக்கி ஆள்வதற்கு அல்ல. மக்களுக்கு சேவை செய்வதற்கு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.மலையக பெருந்தோட்டங்களில் இன்று புதிய பிரச்சினை ஒன்று விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. காலாகாலம் லயன் குடியிருப்புகளில் இருந்தவர்களை அவற்றில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றுவது.இன்று தோட்ட முகாமைத்துவங்கள் எல்லா பகுதிகளிலும் இதனை முன்னெடுத்து வருகின்றது. தோட்டத்தில் வேலை செய்யாதவர்கள் இருந்தால் குடியிருப்பில் இருந்து வளியேற்ற வேண்டும்.அதற்கு பல அடாவடித் தனங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.றம்பொடையிலும் இதனையே செய்துள்ளனர். தோட்டத்தில் வசிக்கும் பல குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.பல ஆண்டு காலமாக இங்கு வசித்தவர்கள் எங்கே போவது என்பதைக் கூட சற்றும் சிந்திக்காமல் செயற்பட்டுள்ளனர்.அத்தோட்டத்திற்கு விசேட அதிரடிப் படை வரவளிக்கப்பட்டுள்ளது. இதனை ஆளும் தரப்பிலுள்ள மலையக அமைச்சர் மற்றும் பிரதிநிதிகளே செய்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.இதன் மூலம் தோட்ட மக்களை அச்சுறுத்தி அவர்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றுவதற்கான புதிய வழிமுறையை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டியுள்ளனர்.இனி ஏனைய தோட்ட நிர்வாகங்களும் இதனை முன்னெடுக்க போகின்றது. எமது மக்களிடம் வாக்குகளை பெற்று அரசியல் பலத்தை பெற்றனர்.அந்த அரசியல் பலத்தை பயன்படுத்தி தனது குடும்பத்தினரின் நலனுக்காக, சகாக்களின் நலனுக்காக அம் மக்களுக்கு எதிராக மனிதாபிமானமற்ற வகையில் செயற்படுவது நியாயமானதா?" என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

  • 358
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads