சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

அரசியல் என்பது மக்களுக்காக மட்டுமே - வேலு குமார்

"அரசியல் பலம் தேவை மக்களை அடக்கி ஆள்வதற்கு அல்ல. மக்களுக்கு சேவை செய்வதற்கு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்." என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்."நுவரெலியா மாவட்டத்தின் ரம்பொடை பிரதேசத்தில் தோட்டமொன்றில் உள்ள பல குடும்பங்களை அவர்களது குடியிருப்புகளில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.அதனை நடைமுறைப்படுத்த விசேட அதிரடிப் படையினர் கொண்டு வரப்பட்டுள்ளனர்.இந்த சம்பவத்தோடு அரசாங்கத்தில் உள்ள மலையக பிரதிநிதிகளுக்கு நேரடியாக தொடர்புள்ளது.அரசியல் பலம் தேவை மக்களை அடக்கி ஆள்வதற்கு அல்ல. மக்களுக்கு சேவை செய்வதற்கு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.மலையக பெருந்தோட்டங்களில் இன்று புதிய பிரச்சினை ஒன்று விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. காலாகாலம் லயன் குடியிருப்புகளில் இருந்தவர்களை அவற்றில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றுவது.இன்று தோட்ட முகாமைத்துவங்கள் எல்லா பகுதிகளிலும் இதனை முன்னெடுத்து வருகின்றது. தோட்டத்தில் வேலை செய்யாதவர்கள் இருந்தால் குடியிருப்பில் இருந்து வளியேற்ற வேண்டும்.அதற்கு பல அடாவடித் தனங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.றம்பொடையிலும் இதனையே செய்துள்ளனர். தோட்டத்தில் வசிக்கும் பல குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.பல ஆண்டு காலமாக இங்கு வசித்தவர்கள் எங்கே போவது என்பதைக் கூட சற்றும் சிந்திக்காமல் செயற்பட்டுள்ளனர்.அத்தோட்டத்திற்கு விசேட அதிரடிப் படை வரவளிக்கப்பட்டுள்ளது. இதனை ஆளும் தரப்பிலுள்ள மலையக அமைச்சர் மற்றும் பிரதிநிதிகளே செய்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.இதன் மூலம் தோட்ட மக்களை அச்சுறுத்தி அவர்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றுவதற்கான புதிய வழிமுறையை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டியுள்ளனர்.இனி ஏனைய தோட்ட நிர்வாகங்களும் இதனை முன்னெடுக்க போகின்றது. எமது மக்களிடம் வாக்குகளை பெற்று அரசியல் பலத்தை பெற்றனர்.அந்த அரசியல் பலத்தை பயன்படுத்தி தனது குடும்பத்தினரின் நலனுக்காக, சகாக்களின் நலனுக்காக அம் மக்களுக்கு எதிராக மனிதாபிமானமற்ற வகையில் செயற்படுவது நியாயமானதா?" என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

  • 451
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads