சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

காதலனுக்காக 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்

பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர் (27). இவரது கணவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். 

சீமா ஹைதருக்கு பப்ஜி என்ற கேமிங் செயலி மூலம் டெல்லி கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் மீனா (22) என்பவர் பழக்கமானார். இந்த பழக்கம் காதலாக மாறியது. இதை தொடர்ந்து சீமா ஹைதர் தனது குழந்தைகளுடன் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தார்.

கிரேட்டர் நொய்டாவை அடைந்து அங்கு சச்சினுடன் வாழ்ந்து வருகிறார். பாகிஸ்தான் பெண்ணான சீமா ஹைதரின் கணவர் குலாம் ஹைதர், தனது மனைவி மற்றும் குழந்தைகளை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்புமாறு இந்திய அரசிக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்து உள்ளார். 

குலாம் ஹைதர் தற்போது சவுதி அரேபியாவில் இருந்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசு தலையிட வேண்டும் என்று குலாம் ஹைதர் அந்த வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தனது மனைவி மற்றும் குழந்தைகளை அவர்களின் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப வேண்டுகோள் விடுத்து உள்ளார். பப்ஜி கேமிங் செயலின் மூலம் இந்தியாவுக்கு வருமாறு தனது மனைவியை சச்சின் மீனா ஏமாற்றியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

குலாம் ஹைதர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பாதுகாப்பாக பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்புமாறு நரேந்திர மோடி அரசாங்கத்திடம் வேண்டுகோள் வைத்து உள்ளார். குலாம் ஹைதர் இந்திய ஊடகங்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். 

ஊடகங்களுக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்து உள்ளார். அவர்கள் உதவியால் தான் தனது மனைவி குழந்தைகள் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க முடிந்தது என கூறி உள்ளார். பாகிஸ்தானின் கராச்சியில் வசிக்கும் சீமா ஹைதருக்கும், டெல்லி கிரேட்டர் நொய்டா ரபுபுராவைச் சேர்ந்த சச்சின் மீனாவுக்கும் பப்ஜி கேம் செயலியில் விளையாடும்போது பழக்கம் ஏற்பட்டது. 

வீடியோகால் மூலம் நெருக்கம் அதிகரித்த பிறகு, சீமா பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக மே 13 அன்று இந்தியா வந்தார். நான்கு குழந்தைகளுடன் ரபுபுராவை அடைந்த சீமா, அம்பேத்கர் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து சச்சினுடன் வாழத் தொடங்கினார். இந்த விஷயம் போலீசாருக்கு தெரியவந்ததும், சீமா தனது நான்கு குழந்தைகள் மற்றும் சச்சினுடன் தலைமறைவானார். 

போலீசார் அரியானாவில் உள்ள பல்லப்கரையில் அனைவரையும் கைது செய்தனர். சச்சின், அவரது தந்தை நேத்ரபால் மற்றும் சீமா ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். குழந்தைகளின் இளம்வயது காரணமாக அம்மா சீமாவுடன் அவர்களும் சிறைக்கு அனுப்பப்பட்டனர். 

சீமா ஹைதர் மற்றும் சச்சின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர்களது காதல், நான்கு குழந்தைகள் மற்றும் சீமாவின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

சீமா மற்றும் சச்சினிடம் இருந்து 3 ஆதார் அட்டைகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர் . இந்த ஆதார் அட்டைகள் போலியானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டைகள் சீமா சச்சினின் மனைவி என்று திருத்தப்பட்டு உள்ளது.

 

சச்சின் மற்றும் சீமாவின் வழக்கறிஞர் ஹேமந்த் கிருஷ்ண பராஷர் கூறுகையில், தற்போதைய முகவரியை மாற்ற வேண்டாம் என்று சீமா ஹைதருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீமாவின் தற்போதைய முகவரி, ரபுபுராவில் உள்ள சச்சினின் வீடு என ஜாமீன் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வழக்கு முடியும் வரை அல்லது நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை சீமா ஹைதர் சச்சின் வீட்டில் இருக்க வேண்டும். 

சச்சினும் சீமாவும் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள். இருவரும் நேபாளம் காட்மாண்டுவில் உள்ள பசுபதிநாதர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து சீமா நேபாள எல்லையில் இருந்து ரபுபுராவுக்கு வந்தார். அவள் பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பவில்லை. முதலில் சச்சினின் தந்தைக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், பின்னர் சச்சின் மற்றும் சீமா ஹைதருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

  • 374
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads