சினிமா செய்திகள்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
Ads
 ·   ·  7519 news
  •  ·  5 friends
  • I

    9 followers

14 வயது சிறுமியின் நிலைகண்டு பதறிய பெற்றோர்

புதுச்சேரி லாஸ்பேட்டை சேர்ந்த பெற்றோர் தங்களது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மகளுக்கு ஆன்லைன் வகுப்பிற்காக ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்தனர். மகள் படிப்பில் சுட்டி என்பதால் ஸ்மார்ட் போனுடன் அலைவதை பெற்றோர்கள் கண்டுகொள்ளவில்லை. ஒரு நாள் நள்ளிரவில் கண்விழித்து பார்த்த தாய், பக்கத்து அறையில் மகள் ஆடையின்றி நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பதறிப்போன தாய், விசாரித்த போது சிறுமி சொன்னதை கேட்டு மேலும் அதிர்ச்சியடைந்தார். ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் வாங்கி கொடுத்த போது, சிறுமி முகநூல் பக்கத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தியுள்ளார். சேலம் என்ற முகவரியில் அழகான போட்டோவுடன் இருந்த இளைஞருக்கு நட்பு அழைப்பும் விடுத்துள்ளார். அந்த இளைஞரும் ஏற்றுக்கொள்ள இருவரும்  சாட்டிங் செய்ய ஆரம்பித்தனர்.

சிறுமியை காதலிப்பதாக கூறிய இளைஞர், பாலியல் ரீதியாக பேசியுள்ளார். பாலுறுப்புகளை தூண்டும் விதமாக இளைஞர் பேசியது சிறுமிக்கு பிடித்துப்போக, சாட்டிங் தொடர்ந்துள்ளது.

சிறுமிக்கு மூளைச்சலவை செய்த இளைஞர் ஒரு கட்டத்தில் தனது நிர்வாண போட்டோவையும் வீடியோவையும் சிறுமி அனுப்ப, பதிலுக்கு அந்த இளைஞரும் தனது அந்தரங்க வீடியோவை அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து ஒரே நாளில் பலமுறை ஆபாசமாக வீடியோ கால் பேசும் படி சிறுமியை இளைஞர் வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிறுமிக்கு ஆபாசமாக பேச வராததால், உன் வீடியோவை நெட்டில் ஷேர் செய்து விடுவேன் என இளைஞர் மிரட்டியுள்ளார்.

பயந்து போன சிறுமி, நள்ளிரவு நேரத்தில் ஆடையின்றி நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தனது மகளுக்கு நேர்ந்தது வேறு பெண்ணுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என கருதிய பெற்றோர் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் புகார் அளித்தனர்.

வழக்குப்பதிவு செய்த முத்தியால்பேட்டை காவல்துறையினர், சிறுமியை மிரட்டிய முகநூல் முகவரியில் இருந்த இளைஞரை பிடித்து விசாரித்த போது அவருக்கு இதற்கும் எந்த தொடர்பு இல்லை என்பதும், போலி முகவரியை வைத்து மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.  சைபர் க்ரைம் உதவியுடன் சிறுமியுடன் பேசிய இளைஞரின் எண்ணை பயன்படுத்தி விசாரித்த போது தஞ்சாவூரை சேர்ந்த எம்,ஏ.. எம்.பில்…, பி.எட் பட்டதாரியான கமலக்கண்ணன் என்பது தெரியவந்தது.

அவனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் திருப்பூர் சாயப்பட்டறையில் மேலாளராக பணியாற்றி வந்ததும், வீடியோ சாட்டிங் சேட்டையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போலி முகநூல் முகவரியை வைத்து பல பெண்களை ஏமாற்றி அவர்களுடன் பாலியல் ரீதியாக சாட் செய்து காதலிப்பது போல நடித்து ஏராளமான ஆபாச படங்களை வைத்திருப்பதும் தெரியவந்தது.

கமலக்கண்ணின் ஸ்மார்ட்போனை ஆய்வு செய்த காவல்துறையினர், சிறுமி மட்டுமல்லாமல் 200க்கும் மேற்பட்ட பெண்களின் 500க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கமலக்கண்ணனை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

  • 884
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads