சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

14 வயது சிறுமியின் நிலைகண்டு பதறிய பெற்றோர்

புதுச்சேரி லாஸ்பேட்டை சேர்ந்த பெற்றோர் தங்களது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மகளுக்கு ஆன்லைன் வகுப்பிற்காக ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்தனர். மகள் படிப்பில் சுட்டி என்பதால் ஸ்மார்ட் போனுடன் அலைவதை பெற்றோர்கள் கண்டுகொள்ளவில்லை. ஒரு நாள் நள்ளிரவில் கண்விழித்து பார்த்த தாய், பக்கத்து அறையில் மகள் ஆடையின்றி நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பதறிப்போன தாய், விசாரித்த போது சிறுமி சொன்னதை கேட்டு மேலும் அதிர்ச்சியடைந்தார். ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் வாங்கி கொடுத்த போது, சிறுமி முகநூல் பக்கத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தியுள்ளார். சேலம் என்ற முகவரியில் அழகான போட்டோவுடன் இருந்த இளைஞருக்கு நட்பு அழைப்பும் விடுத்துள்ளார். அந்த இளைஞரும் ஏற்றுக்கொள்ள இருவரும்  சாட்டிங் செய்ய ஆரம்பித்தனர்.

சிறுமியை காதலிப்பதாக கூறிய இளைஞர், பாலியல் ரீதியாக பேசியுள்ளார். பாலுறுப்புகளை தூண்டும் விதமாக இளைஞர் பேசியது சிறுமிக்கு பிடித்துப்போக, சாட்டிங் தொடர்ந்துள்ளது.

சிறுமிக்கு மூளைச்சலவை செய்த இளைஞர் ஒரு கட்டத்தில் தனது நிர்வாண போட்டோவையும் வீடியோவையும் சிறுமி அனுப்ப, பதிலுக்கு அந்த இளைஞரும் தனது அந்தரங்க வீடியோவை அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து ஒரே நாளில் பலமுறை ஆபாசமாக வீடியோ கால் பேசும் படி சிறுமியை இளைஞர் வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிறுமிக்கு ஆபாசமாக பேச வராததால், உன் வீடியோவை நெட்டில் ஷேர் செய்து விடுவேன் என இளைஞர் மிரட்டியுள்ளார்.

பயந்து போன சிறுமி, நள்ளிரவு நேரத்தில் ஆடையின்றி நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தனது மகளுக்கு நேர்ந்தது வேறு பெண்ணுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என கருதிய பெற்றோர் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் புகார் அளித்தனர்.

வழக்குப்பதிவு செய்த முத்தியால்பேட்டை காவல்துறையினர், சிறுமியை மிரட்டிய முகநூல் முகவரியில் இருந்த இளைஞரை பிடித்து விசாரித்த போது அவருக்கு இதற்கும் எந்த தொடர்பு இல்லை என்பதும், போலி முகவரியை வைத்து மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.  சைபர் க்ரைம் உதவியுடன் சிறுமியுடன் பேசிய இளைஞரின் எண்ணை பயன்படுத்தி விசாரித்த போது தஞ்சாவூரை சேர்ந்த எம்,ஏ.. எம்.பில்…, பி.எட் பட்டதாரியான கமலக்கண்ணன் என்பது தெரியவந்தது.

அவனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் திருப்பூர் சாயப்பட்டறையில் மேலாளராக பணியாற்றி வந்ததும், வீடியோ சாட்டிங் சேட்டையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போலி முகநூல் முகவரியை வைத்து பல பெண்களை ஏமாற்றி அவர்களுடன் பாலியல் ரீதியாக சாட் செய்து காதலிப்பது போல நடித்து ஏராளமான ஆபாச படங்களை வைத்திருப்பதும் தெரியவந்தது.

கமலக்கண்ணின் ஸ்மார்ட்போனை ஆய்வு செய்த காவல்துறையினர், சிறுமி மட்டுமல்லாமல் 200க்கும் மேற்பட்ட பெண்களின் 500க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கமலக்கண்ணனை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

  • 1012
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads