சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ரெஜினோல்ட் குரே மரணிக்கவில்லை கொலை செய்யப்பட்டுள்ளார் : மைத்திரி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரெஜினோல்ட் குரே மரணிக்கவில்லை. அவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். இதனை தெரிவிப்பதற்கு நான் அச்சப்படப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான லரின் பெரேரா, ரெஜினோல்ட் குரே, புத்திக குருகுலரத்ன மற்றும் முத்து சிவலிங்கம் ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்த சிறந்த தலைவர். அவர் சிறந்த  அறிவார்ந்தவர். அனைவருடன் அன்பாக பழகக்கூடியவர். அதனால் அவரை நான் வடக்கு ஆளுநராகவும் பின்னர் மாணிக்ககல் கூட்டுத்தாபன தலைவராகவும் நியமித்தேன். அதேபோன்று அவர் அரசியல் துறையில் அமைச்சு பதவி உட்பட பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். 

அத்துடன் ரெஜினோல்ட் குரே மரணித்தார் என நான் நம்பமாட்டேன். அவர் தனது உயிரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காக அர்ப்பணித்தார் என்றே தெரிவிக்கிறேன்.அவரின் மரணம் தொடர்பில் நான் அறிந்த மட்டில் விசாரணை ஒன்று இடம்பெறவில்லை. என்றாலும் ஒருவகையில் அது கொலை. அவர் மரணித்தார் என்பதைவிட  அவரை கொலைசெய்தார்கள் என தெரிவிப்பதற்கு நான் அச்சப்படப்போவதில்லை. 

ஏனெனில் கடந்த மாகாணசபை தேர்தலுக்காக வேட்புமனு கோரிய கட்டத்திலே அவருக்கு இறுதய நோய் ஏற்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஒரு வார காலத்துக்குள்தான் களுத்துறை மாவட்டத்துக்காக வேட்பாளர் தெரிவு கலந்துரையாடலுக்கு கலந்துகொள்ள சென்றிருந்தார்.

அவர் இந்த கலந்துரையாடலுக்கு செல்லும்போது, என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அங்கு செல்வதாக தெரிவித்தார்.  அங்கு செல்லவேண்டாம் ஏனெனில் பல கட்சிகள் இணைந்து வேட்டபாளர்கள் தெரிவு இடம்பெறுவதால், அங்கு வாக்குவாதங்கள் இடம்பெறும். அதனால் சுகயீனமுற்றிருக்கும் நீங்கள் அங்கு செல்ல வேண்டாம்  என நான் அவருக்கு குறினேன் என்றாலும் அவர் அந்த கூட்டத்துக்கு சென்றிருந்தார்.

என்றாலும் அந்த கலந்துரையாடலின்போது ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான வார்த்தை பிரயோகங்களால்  அவர் பாரிய மன அழுத்தத்துக்கு, மன வேதனைக்கு ஆளாகி இருந்தார்.  அவர் ஒரு வாரத்துக்கு முன்னர் சத்திரசிகிச்சைக்கு உட்பட்டிருந்ததால், அந்த கவந்துரையாடலில் அவருக்கு எதிராக பேசப்பட்ட விடயங்களை அவரால் தாங்கிக்கொள்ள முடியாமல் போனது. அதனால் அவர் அந்த கலந்துரையாடலில் இருந்து வெளியேறி என்னை தொடர்புகாெண்டு இடம்பெற்ற விடயங்களை தெரிவித்தார். என்றாலும் அவருக்கு நான் ஆறுதல் தெரிவித்து, வீட்டுக்கு சென்று ஓய்வாக இருக்குமாறு தெரிவித்தேன். பின்னர் சில தினங்களில் அவர் மீண்டும் நோய்வாய்ப்பட்டு மரணித்தார்.அதனால் அவரின் மரணம் தொடர்பில் எந்த விசாரணையும் இடம்பெறாமை மிகவும் பேரழிவாகவே நான் கருதுகிறேன் என்று கூறினார்.

  • 258
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads