சினிமா செய்திகள்
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
ஜெயம் ரவி மீது மனைவி ஆர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு
தனது மனைவியுடன் விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அந்த அறிக்கைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டு
Ads
 ·   ·  7914 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ரெஜினோல்ட் குரே மரணிக்கவில்லை கொலை செய்யப்பட்டுள்ளார் : மைத்திரி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரெஜினோல்ட் குரே மரணிக்கவில்லை. அவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். இதனை தெரிவிப்பதற்கு நான் அச்சப்படப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான லரின் பெரேரா, ரெஜினோல்ட் குரே, புத்திக குருகுலரத்ன மற்றும் முத்து சிவலிங்கம் ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்த சிறந்த தலைவர். அவர் சிறந்த  அறிவார்ந்தவர். அனைவருடன் அன்பாக பழகக்கூடியவர். அதனால் அவரை நான் வடக்கு ஆளுநராகவும் பின்னர் மாணிக்ககல் கூட்டுத்தாபன தலைவராகவும் நியமித்தேன். அதேபோன்று அவர் அரசியல் துறையில் அமைச்சு பதவி உட்பட பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். 

அத்துடன் ரெஜினோல்ட் குரே மரணித்தார் என நான் நம்பமாட்டேன். அவர் தனது உயிரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காக அர்ப்பணித்தார் என்றே தெரிவிக்கிறேன்.அவரின் மரணம் தொடர்பில் நான் அறிந்த மட்டில் விசாரணை ஒன்று இடம்பெறவில்லை. என்றாலும் ஒருவகையில் அது கொலை. அவர் மரணித்தார் என்பதைவிட  அவரை கொலைசெய்தார்கள் என தெரிவிப்பதற்கு நான் அச்சப்படப்போவதில்லை. 

ஏனெனில் கடந்த மாகாணசபை தேர்தலுக்காக வேட்புமனு கோரிய கட்டத்திலே அவருக்கு இறுதய நோய் ஏற்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஒரு வார காலத்துக்குள்தான் களுத்துறை மாவட்டத்துக்காக வேட்பாளர் தெரிவு கலந்துரையாடலுக்கு கலந்துகொள்ள சென்றிருந்தார்.

அவர் இந்த கலந்துரையாடலுக்கு செல்லும்போது, என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அங்கு செல்வதாக தெரிவித்தார்.  அங்கு செல்லவேண்டாம் ஏனெனில் பல கட்சிகள் இணைந்து வேட்டபாளர்கள் தெரிவு இடம்பெறுவதால், அங்கு வாக்குவாதங்கள் இடம்பெறும். அதனால் சுகயீனமுற்றிருக்கும் நீங்கள் அங்கு செல்ல வேண்டாம்  என நான் அவருக்கு குறினேன் என்றாலும் அவர் அந்த கூட்டத்துக்கு சென்றிருந்தார்.

என்றாலும் அந்த கலந்துரையாடலின்போது ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான வார்த்தை பிரயோகங்களால்  அவர் பாரிய மன அழுத்தத்துக்கு, மன வேதனைக்கு ஆளாகி இருந்தார்.  அவர் ஒரு வாரத்துக்கு முன்னர் சத்திரசிகிச்சைக்கு உட்பட்டிருந்ததால், அந்த கவந்துரையாடலில் அவருக்கு எதிராக பேசப்பட்ட விடயங்களை அவரால் தாங்கிக்கொள்ள முடியாமல் போனது. அதனால் அவர் அந்த கலந்துரையாடலில் இருந்து வெளியேறி என்னை தொடர்புகாெண்டு இடம்பெற்ற விடயங்களை தெரிவித்தார். என்றாலும் அவருக்கு நான் ஆறுதல் தெரிவித்து, வீட்டுக்கு சென்று ஓய்வாக இருக்குமாறு தெரிவித்தேன். பின்னர் சில தினங்களில் அவர் மீண்டும் நோய்வாய்ப்பட்டு மரணித்தார்.அதனால் அவரின் மரணம் தொடர்பில் எந்த விசாரணையும் இடம்பெறாமை மிகவும் பேரழிவாகவே நான் கருதுகிறேன் என்று கூறினார்.

  • 160
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads