சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

இறுதி நிமிடங்களை நெருங்கும் டைட்டன் கப்பல்

டைட்டானிக் கப்பல் 1912-ல் கட்டி முடிக்கப்பட்டது. அந்த சமயத்தில் மிகப்பெரிய சொகுசுக் கப்பல் இதுதான். டைட்டானிக் தனது முதல் பயணத்தை இங்கிலாந்தில் இருந்து தொடங்கியது. அமெரிக்கா நோக்கி சென்ற அதில் 2000 பயணிகள் பயணித்தனர். அனைவரும் பெரும் பணக்காரர்கள் எனப்படுகிறது. 

மகிழ்ச்சியுடன் பயணித்த அவர்களுக்கு இதுதான் கடைசிப் பயணம் என தெரியாது. திடீரென்று டைட்டானிக் கப்பல் பனிப்பாறைமீது பயங்கரமாக மோதியது. இதனால் கப்பல் இரண்டாக முறிந்து கடலுக்கடியில் முழ்கியது. 

டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த 1500-க்கும் மேற்பட்டோர் ஜலசமாதி ஆகினர். இதனை மையமாக வைத்து 1997-ல் 'டைட்டானிக்' என்ற ஹாலிவுட் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் இன்றளவும் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் உள்ளன. 

கனடா நாட்டின் நியூபவுண்ட்லாந்து தீவில் இருந்து 595 கி.மீ. தொலைவில், 13 ஆயிரம் அடி ஆழத்தில் அவைகள் கிடக்கின்றன. அமெரிக்காவின் 'ஓசன்கேட் எக்ஸ்படீசன்ஸ்' என்ற நிறுவனம் இதனை வியாபாரமாக மாற்ற நினைத்தது. அது டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை காண்பதற்கான ஆழ்கடல் சுற்றுலாவை கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கியது. 

இதற்காக போலார் பிரின்ஸ் என்ற கப்பலும், டைட்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பலும் பயன்படுத்தப்படுகிறது. 'டைட்டன்' வெறும் 22 அடி நீளமே உள்ள சிறிய நீர்மூழ்கிக் கப்பல்தான். இது டைட்டானியம் மற்றும் கார்பன் இழைகளால் ஆனது. இதில் 5 பேர் மட்டுமே பயணிக்க முடியும். டைட்டனில் உள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியால் 96 மணி நேரம் சுவாசிக்கலாம். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு கடலுக்குள் 'டைட்டன்' இறக்கிவிடப்பட்டது. அதில் 5 கோடீஸ்வரர்கள் பயணித்தனர். அவர்களின் விவரம் வருமாறு, இங்கிலாந்தைச் சேர்ந்த ஹமிஷ் ஹார்டிங் (வயது 58), பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பால் ஹென்றி நர்கியோல் (77), ஓஷன்கேட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டாக்டன் ரஷ் (61), பாகிஸ்தானின் பெரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஷசாதா தாவூத் (48), அவருடைய மகன் சுலைமான் தாவூத் (19). 

ஆழ்கடல் பயணத்தை தொடங்கிய ஒன்றே முக்கால் மணி நேரத்தில், 'போலார் பிரின்ஸ்' கப்பலுடன் டைட்டனின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் 'ஓசன்கேட் எக்ஸ்படீசன்ஸ்' நிறுவனம் அதிர்ச்சியடைந்தது. தற்போது நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

நீர்மூழ்கிக் கப்பல் ஓட்டுனரின் மனைவி வெண்டி ரஷ் டைட்டானிக் கப்பலில் இறந்த தம்பதியின் வழித்தோன்றல் என தெரிய வந்துள்ளது. வெண்டி ரஷ், வணிக அதிபரான இசிடோர் ஸ்ட்ராஸ் மற்றும் அவரது மனைவி ஐடா ஆகியோரின் கொள்ளுப் பேத்தி ஆவார். அவர்கள் டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளாகப் பயணம் செய்துள்ளனர். 

வெண்டி ரஷ், ஓஷன்கேட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டாக்டன் ரஷை 1986-ம் ஆண்டில் மணந்தார். இவர் ஓஷன்கேட் நிறுவனத்தில் தகவல் தொடர்பு இயக்குநராக உள்ளார். ஸ்டாக்டன் ரஷ் டைட்டானிக்கிற்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலை ஓட்டியவர் ஆவார்.

  • 380
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads