சினிமா செய்திகள்
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
ஜெயம் ரவி மீது மனைவி ஆர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு
தனது மனைவியுடன் விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அந்த அறிக்கைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டு
Ads
 ·   ·  7914 news
  •  ·  5 friends
  • I

    9 followers

முத்துராஜா யானை விவகாரம் தொடர்பாக தாய்லாந்து அரசிடம் கவலை தெரிவித்துள்ளோம் : பிரதமர்

 

தாய்லாந்து நாட்டினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட முத்துராஜா யானைக்கு நேர்ந்துள்ள நிலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் கவலை தெரிவிக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிர்க்கட்சி உறுப்பினர் டலஸ் அழகபெரும சபையில் வலியுறுத்தினார்.

தாய்லாந்து நாட்டுக்கு அரசமுறை பயணத்தின் போது இலங்கை அரசு என்ற ரீதியில் தாய்லாந்து அரசாங்கத்திடம் கவலை தெரிவித்துள்ளோம். யானை விவகாரத்தால் இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் பாதிப்பு ஏற்படாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். சபாநாயகர்  தலைமையில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது  மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது,

விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும  தாய்லாந்து நாட்டினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட முத்துராஜா யானையின் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதையிட்டு நாடு என்ற ரீதியில் அனைவரும் கவலையடைய வேண்டும்.

இந்த யானை  அளுத்கம கந்த விகாரைக்கு புண்ணிய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டதை தொடர்ந்து அங்கு அந்த யானை உடலியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக ரெயா என்ற விலங்கின நலன்பேண் பாதுகாப்பு அமைப்பு அரசாங்கத்திடம் முறைப்பாடளித்துள்ளது.

முத்துராஜா யானை தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ரெயா அமைப்பு இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகத்தில் முறைப்பாடளித்துள்ளது.

இதனை தொடர்ந்து இந்த யானையை மீண்டும் தாய்லாந்துக்கு கொண்டு செல்ல தாய்லாந்து தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பிற நாடுகள் அன்பளிப்பாக வழங்கும் விலங்குகளை இலங்கை இவ்வாறான தன்மையில் தான் பாதுகாக்கிறது. விலங்குகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்பில் இருந்து விலகியுள்ளது என்ற நிலைப்பாடு தோற்றம் பெற்றுள்ளது.

இது நாட்டுக்கு கரும்புள்ளியாக காணப்படுகிறது. ஆகவே தாய்லாந்து நாட்டினால் வழங்கப்பட்ட முத்துராஜா யானை விவகாரத்தில் அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் தாய்லாந்து அரசாங்கத்திடம் கவலை தெரிவிக்க வேண்டும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தாய்லாந்து நாட்டினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட முத்துராஜா என்ற யானை முன்னாள் ஜனாதிபதியால் அளுத்கம கந்த விகாரைக்கு புண்ணிய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. விகாரைக்கு வழங்கப்பட்டதன் பின்னர் வனஜீவராசிகள் திணைக்களம் பொறுப்பேற்க முடியாது.

விகாரைக்கு புண்ணிய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட இந்த உடலியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக விலங்கின நலன்பேண் அமைப்புக்கள் முறைப்பாடளித்ததை தொடர்ந்து இந்த யானை தெஹிவளை தேசிய மிருககாட்சிசாலைக்கு விகாரையின் அனுமதியுடன் கொண்டு செல்லப்பட்டது. தற்போது யானைக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

இந்த யானை விவகாரம் தொடர்பில் கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.இருப்பினும் இந்த யானையை தாய்லாந்துக்கு கொண்டு செல்லும் உறுதியான நிலைப்பாட்டில் தாய்லாந்து அரசாங்கம் உள்ளது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன அண்மையில் தாய்லாந்து நாட்டுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டிருந்த போது முத்துராஜா யானை விவகாரம் தொடர்பில்  நாடு என்ற ரீதியில் கவலை தெரிவித்துள்ளோம்.ஆகவே தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார்.

  • 147
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads