சினிமா செய்திகள்
எஸ்.எஸ் சந்திரன் வேண்டாம்; கவுண்டமணியை போடுங்க - நடிகர் ராமராஜன்
கரகாட்டக்காரனில் கண்டிஷன் போட்டு ஜெயித்த ராமராஜன்கரகாட்டக்கரன் படத்தில் கவுண்டமணி இல்லை என்றால் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராமராஜன்
மடோனா செபாஸ்டியனின் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நட
நடிகர் மயில்சாமியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
நகைச்சுவை நடிகர் மயில்சாமி பென்ஸ் காரை தொட்டு பார்த்ததற்காக “அந்த” ஆளு அடிச்சாரு.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகர்மறைந்த மயில்சாமி நிகழ்ச்சி ஒன்றுக்கு
நடிகர் அரவிந்த்சாமி பெற்ற புத்தக அனுபவம்
அரவிந்த்சாமி ஒரு நிறுவனத்தின் இயக்குநர். சினிமா நடிகர். அவருடைய அனுபவத்திலிருந்து, பணம் குறித்து தான் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்தபோது, The Psychology O
வேட்டையன் படத்தில் நடிக்க ராணா வாங்கிய சம்பளம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படத்தை லைகா தயாரித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் ரஜ
‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. 
பைக் ரைடில் சாதனைக்கு மேல் சாதனை செய்யும் தல அஜித்
அஜித்குமாருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், சமீபமாக பொறுமையாகவே படங்கள் நடித்து வருகிறார். அதேசமயம் அடிக்கடி உலகளாவிய பைக் பயணங்களையும் மேற
கைகோர்க்கும் ஜீவா - அர்ஜூன்
தமிழ் சினிமாவில் ஜீவா மற்றும் அர்ஜூன் இணைந்து அகத்தியா என்றதொரு புதிய படத்தில் நடிக்கின்றனர்.தமிழ் சினிமாவில் டிஷ்யூம் தொடங்கி கோ, சிவா மனசுல சக்தி, ஜ
'ஒன்ஸ்மோர்' படம் பற்றிய தகவல்
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒன்ஸ்மோர்' என பெயரிடப
இந்தியாவின் சுதந்திரத்தை முதல்முறை "ஆல் இந்தியா ரேடியோவில்" அறிவித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?
போராட்டக்காரர்கள் ஏராளம், வீழ்ந்தவர்கள் ஏராளம், தொடர்ந்து போரிட்டவர்கள் ஏராளம், எல்லாம் எதற்காக 'சுதந்திர இந்தியா' என்ற வார்த்தைகளுக்காக. அந்த வார்த்த
தொடங்கியது வேட்டையன் பட புக்கிங்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்
பா.ரஞ்சித், மாரி செல்வராஜின் கதைகள் சாதிய மோதலை ஏற்படுத்துகின்றன"- பாடலாசிரியர் குருமூர்த்தி குற்றச்சாட்டு
திருவண்ணாமலையில் கலன் திரைப்பட போஸ்டரை பட குழுவினர் இன்று வெளியிட்டனர். இந்த படத்தை வீர முருகன் இயக்குயுள்ளார், ராம லட்சுமி நிறுவனம் மற்றும் குருமூர்த
Ads
 ·   ·  7979 news
  •  ·  5 friends
  • I

    9 followers

வர்த்தகர்கள் அரசியல்வாதிகளின் அடிமைகளாக இருக்கக் கூடாது - சஜித்

சிறு மற்றும் நடுத்தர வணிகர்களின் முன்னேற்றத்திற்கு வேறாக்கப்பட்ட தனி பிரிவொன்று நாட்டு நிர்வாகியின் கீழ் செயல்படுத்தப்பட்டு தெளிவானதொரு கொள்கையுடன் குறிப்பிட்ட கால அட்டவணையுடன் இலக்குடனான பாரிய வேலைத்திட்டத்தை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி தயார் எனவும், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் நலனுக்காக தாம் முன்நிற்பதாகவும், இதனை ஓர் சட்ட கட்டமைப்பினுள் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான பாதை திறக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நாட்டு வர்த்தகர்கள் அரசியல்வாதிகளின் அடிமைகளாக மாறாமல் வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்குப்பதிலளிக்கும் கட்டமைப்பொன்றை நாட்டில் உருவாக்குவதே இடம்பெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சித்தலைவர் சுட்டிக்காட்டினார்.

தொழில் முயற்சியாண்மையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் பழைய போக்கைகைவிட்டு, முறைமையொன்றின் ஊடாக பதில் வழங்கும் கட்டமைப்பை உருவாக்குவது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும் எனவும், பக்கச்சார்பற்ற மற்றும் வெளிப்படத்தன்மை கொண்ட கட்டமைப்பு அமையும்போது, இலஞ்சம் மற்றும் கப்பம் போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இவ்வாறு வங்குரோத்து சூழ்நிலையில் அரசியல்வாதிகளே முதலில் அர்ப்பணிப்புகளைச் செய்ய வேண்டும்என்றும், எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன் அத்தகைய அர்ப்பணங்களைச் செய்யதயார் எனவும், குபேரர்களின் கடன்களை தள்ளுபடி செய்வது கடந்த காலங்களில் மேற்கொள்ளப்படும் அதேவேளையில், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் கடனை அறவிட கடுமையான முறைகளை கையாள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.

எந்தவொரு தரப்பினருக்கும் விசேட அங்கீகாரம் வழங்கப்பட்டு கவனிப்பு மேற்கொள்ளப்படுவதை அனுமதிக்கப் போவதில்லை எனவும், சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

  • 327
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads