சினிமா செய்திகள்
பாடகி ஜென்சி ஓரங்கட்டப்பட்ட மர்மம் என்ன?
சினிமாவில் நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில் ஜொலிப்பதும், பின்னாளில் மார்க்கெட் இழப்பதும் சர்வ சாதாரணமாக நடப்பதுதான். ஆனால் பின்னணி பாடகர்களை
இளைஞர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில
‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப
 'மனுசி' படத்தின் டிரைலர் வெளியானது  (டிரைலர் வீடியோ இணைப்பு)
அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆண்ட்ரியாவின் பிறந்தநாளில
குழந்தைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த சுலக்சனா
16 வயதில் நடிக்க வந்து 18 வயதில் திருமணம் செய்து 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை சுலக்சனா விவாகரத்து பெற்று தனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவ
மும்பையில் 4000 ஆயிரம் சதுர அடியில்  புது வீடு வாங்கினார் பூஜா ஹெக்டே
தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெக
வைரலாகும் ‘விசில் போடு’ பாடல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து
தமிழ் புத்தாண்டையொட்டி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் காட்சிய
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்ட விஷால்
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்
இணையத்தில் லீக் ஆன GOAT First Single பாடல்
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (கோட்) படம் உருவாகி வருகிறது.
நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருபவர் சாயாஜி ஷிண்டே. தமிழில் பாரதியார் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவான ‘பாரதி’ படத்தில் நடித்தவர். மகார
மனிஷா கொய்ராலா பற்றி பலரும் அறிந்திடாத தகவல்
உச்சத்தில் இருந்து ஜீரோவான நேபாள ராணி மனிஷா கொய்ராலா.. மது தான் காரணமா?நடிகை மனிஷா கொய்ராலா நேபாள நாட்டின் ராஜகுமாரியாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில்
Ads
 ·   ·  7493 news
  •  ·  5 friends
  • I

    9 followers

முதியோரின் ஓட்டுக்களால் அலறும் தி.மு.க

தமிழகத் தேர்தலில் பதிவாகும் தபால் ஓட்டுகளில் திமுக எப்போதுமே மிகுந்த அக்கறை காட்டும். தீவிர கவனமும் செலுத்தும். ஏனென்றால் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலானோர் திமுகவிற்கு வாக்களிப்பது உண்டு. இதற்கு காரணம் என்ன என்பது அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த ஒன்று.

இதனால்தான் எப்போதுமே, தபால் ஓட்டில் திமுக முன்னிலை என்ற தகவலை திமுக ஆதரவு டிவி சேனல்கள் ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் முன்பாகவே வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும். அதேநேரம் 2011, 2016 தேர்தல்களில் மின்னணு எந்திர ஓட்டில் பின்னிலை என்ற நிலைதான் திமுகவுக்கு ஏற்பட்டு உள்ளது.

கடைசி நேரத்தில் இழுபறி வந்தால் பல நேரங்களில் திமுகவுக்கு இந்த தபால் ஓட்டுகள் கைகொடுத்திருக்கிறது. இந்த தேர்தலிலும் அரசு ஊழியர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், போலீசார் என சுமார் 5 லட்சம் பேர் தபால் ஓட்டு போட்டுள்ளனர். இந்த ஓட்டுகளில் சுமார் 70 சதவீதம் தங்களுக்கு கிடைத்துவிடும் என்று திமுக நம்புகிறது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கும் தபால் ஓட்டுப் போட தேர்தல் கமிஷன் இம்முறை அனுமதித்தது. சுமார் 2 லட்சம் பேர் இப்படி தபால் ஓட்டு போட்டு இருப்பதுதான் திமுகவினருக்கு பெருத்த கவலையையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

80 வயதுக்கு மேற்பட்டவர்களின் வீட்டுக்கு தபால் வாக்கு சீட்டை எடுத்துச்சென்ற அரசு அதிகாரிகள், முறைகேட்டில் ஈடுபட்டு அதிமுகவுக்கு ஆதரவாக ஓட்டுகளை பதிவு செய்திருப்பார்களோ என்ற  பலத்த சந்தேகம்தான் இதற்கு காரணம்.

என்னதான் அரசு ஊழியர்களில் பெரும் எண்ணிக்கையில் திமுகவுக்கு ஆதரவாக தபால் வாக்கு போட்டிருந்தாலும்கூட 80 வயதுக்கு மேற்பட்டோரின் தபால் ஓட்டுகள், தொகுதியின் தேர்தல் முடிவுகளை மாற்றி விடுமோ என்றும் திமுக கவலைப்படுகிறது.

இதுபோன்ற பயம் தேர்தல் நடப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்பாகவே, திமுகவிற்கு வந்துவிட்டது. அப்போது மாவட்டசெயலாளர்கள் மற்றும் கட்சியின் வேட்பாளர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் திமுக அமைச்சர்கள் அனைவரும், 80 வயதுக்கு மேற்பட்டோர் பதிவு செய்யும் தபால் ஓட்டுகள் குறித்து நமது கட்சியினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும், முறைகேடுகள் நடக்காமல் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டுமென்று அறிவுரை வழங்கினர்.

இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், தங்கள் தொகுதியில் எத்தனை பேர் தபால் ஓட்டு போடுவதற்கு விண்ணப்பித்துள்ளனர், என்ற தகவல் திமுகவினருக்கு கடைசியாகத்தான் கிடைத்திருக்கிறது.

ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை பேர் தபால் ஓட்டு போட்டனர் என்ற சரியான கணக்கும் கூட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்த பிறகே திமுகவினருக்கு முழுமையாக தெரிய வந்துள்ளது. தபால் ஓட்டுப் போட்ட முதியவர்களின் பின்னணி பற்றி அறிந்து திமுகவினர் பீதியடைய தொடங்கியிருக்கிறார்கள்.

  • 471
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads