சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

முதியோரின் ஓட்டுக்களால் அலறும் தி.மு.க

தமிழகத் தேர்தலில் பதிவாகும் தபால் ஓட்டுகளில் திமுக எப்போதுமே மிகுந்த அக்கறை காட்டும். தீவிர கவனமும் செலுத்தும். ஏனென்றால் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலானோர் திமுகவிற்கு வாக்களிப்பது உண்டு. இதற்கு காரணம் என்ன என்பது அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த ஒன்று.

இதனால்தான் எப்போதுமே, தபால் ஓட்டில் திமுக முன்னிலை என்ற தகவலை திமுக ஆதரவு டிவி சேனல்கள் ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் முன்பாகவே வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும். அதேநேரம் 2011, 2016 தேர்தல்களில் மின்னணு எந்திர ஓட்டில் பின்னிலை என்ற நிலைதான் திமுகவுக்கு ஏற்பட்டு உள்ளது.

கடைசி நேரத்தில் இழுபறி வந்தால் பல நேரங்களில் திமுகவுக்கு இந்த தபால் ஓட்டுகள் கைகொடுத்திருக்கிறது. இந்த தேர்தலிலும் அரசு ஊழியர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், போலீசார் என சுமார் 5 லட்சம் பேர் தபால் ஓட்டு போட்டுள்ளனர். இந்த ஓட்டுகளில் சுமார் 70 சதவீதம் தங்களுக்கு கிடைத்துவிடும் என்று திமுக நம்புகிறது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கும் தபால் ஓட்டுப் போட தேர்தல் கமிஷன் இம்முறை அனுமதித்தது. சுமார் 2 லட்சம் பேர் இப்படி தபால் ஓட்டு போட்டு இருப்பதுதான் திமுகவினருக்கு பெருத்த கவலையையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

80 வயதுக்கு மேற்பட்டவர்களின் வீட்டுக்கு தபால் வாக்கு சீட்டை எடுத்துச்சென்ற அரசு அதிகாரிகள், முறைகேட்டில் ஈடுபட்டு அதிமுகவுக்கு ஆதரவாக ஓட்டுகளை பதிவு செய்திருப்பார்களோ என்ற  பலத்த சந்தேகம்தான் இதற்கு காரணம்.

என்னதான் அரசு ஊழியர்களில் பெரும் எண்ணிக்கையில் திமுகவுக்கு ஆதரவாக தபால் வாக்கு போட்டிருந்தாலும்கூட 80 வயதுக்கு மேற்பட்டோரின் தபால் ஓட்டுகள், தொகுதியின் தேர்தல் முடிவுகளை மாற்றி விடுமோ என்றும் திமுக கவலைப்படுகிறது.

இதுபோன்ற பயம் தேர்தல் நடப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்பாகவே, திமுகவிற்கு வந்துவிட்டது. அப்போது மாவட்டசெயலாளர்கள் மற்றும் கட்சியின் வேட்பாளர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் திமுக அமைச்சர்கள் அனைவரும், 80 வயதுக்கு மேற்பட்டோர் பதிவு செய்யும் தபால் ஓட்டுகள் குறித்து நமது கட்சியினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும், முறைகேடுகள் நடக்காமல் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டுமென்று அறிவுரை வழங்கினர்.

இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், தங்கள் தொகுதியில் எத்தனை பேர் தபால் ஓட்டு போடுவதற்கு விண்ணப்பித்துள்ளனர், என்ற தகவல் திமுகவினருக்கு கடைசியாகத்தான் கிடைத்திருக்கிறது.

ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை பேர் தபால் ஓட்டு போட்டனர் என்ற சரியான கணக்கும் கூட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்த பிறகே திமுகவினருக்கு முழுமையாக தெரிய வந்துள்ளது. தபால் ஓட்டுப் போட்ட முதியவர்களின் பின்னணி பற்றி அறிந்து திமுகவினர் பீதியடைய தொடங்கியிருக்கிறார்கள்.

  • 601
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads