சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

விவசாயிகளுக்கு உரக் கொள்வனவுக்கான நிவாரணத்துக்கு 10,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு : அமைச்சர் மஹிந்த அமரவீர

நாட்டில் நெற்செய்கையை ஊக்குவிப்பதற்காக விரைவில் விவசாயிகளுக்கு உரக் கொள்வனவுக்கான கூப்பன் முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு 40,000 ரூபா வரை உரக்கொள்வனவுக்கான நிவாரணம் வழங்கப்படவுள்ளது. இதற்காக 10,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை  அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டுக்கு அரிசி இறக்குமதி செய்யப்படும் நிலைமையைக் தவிர்ப்பதற்காக நெற் செய்கையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய 40 000 ரூபாவாகக் காணப்பட்ட யூரியா உரத்தின் விலை 10 000 ரூபாவாகக் குறைத்துள்ளோம்.

எதிர்வரும் தினங்களில் உரக்கப்பல்கள் வருகை தந்ததன் பின்னர் இவ்விலைகள் மேலும் குறைவடையும். உர விநியோகத்தில் போட்டித்தன்மை ஏற்பட்டால் அவற்றின் விலைகள் இயல்பாகவே குறைவடையும். ஒரு ஹெக்டயரில் நெற் செய்கையில் ஈடுபடுவோருக்கு 20,000 ரூபாவும் , இரு ஹெக்டயரில் நெற் செய்கையில் ஈடுபடுவோருக்கு 40,000 ரூபாவும் வழங்கப்பட்டவுள்ளது.

உரக்கொள்னவுக்காக கூப்பன் முறைமை ஊடாக இந்த தொகை வழங்கப்படவுள்ளது. இதற்காக 10,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது கூப்பன் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனவே வெகுவிரைவில் அவை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

இவ்வாறான நிவாரணங்களை வழங்குவதன் நோக்கம் வெளிநாடுகளிலிருந்து அரசி இறக்குமதி செய்யும் நிலைமையை தவிர்த்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதாகும். உண்மையில் எம்மால் தற்போது அந்த இலக்கை அடைய முடிந்துள்ளது. எனவே இனிவரும் காலங்களில் பாஸ்மதி தவிர்ந்த வேறு எந்தவொரு அரிசியையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படாது.

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகளும் தமது ஒத்துழைப்பை வழங்கினால் , அது அவர்களது அரசியல் எதிர்காலத்துக்கு கூட கைகொடுத்திருக்கும். எனினும் அவர்கள் வெளியிலிருந்து கொண்டு விமர்சனங்களை மாத்திரமே முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அரிசி மாத்திரமின்றி முட்டையையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை காணப்படுகிறது. எனவே கோழிப்பண்ணை தொழில் உள்ளிட்டவற்றையும் இவ்வாறான நிவாரணங்கள் ஊடாக ஊக்குவித்தால் முட்டை விலையை 30 ரூபா வரை குறைக்க முடியும். விரைவில் அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றார்.

  • 272
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads