சினிமா செய்திகள்
எஸ்.எஸ் சந்திரன் வேண்டாம்; கவுண்டமணியை போடுங்க - நடிகர் ராமராஜன்
கரகாட்டக்காரனில் கண்டிஷன் போட்டு ஜெயித்த ராமராஜன்கரகாட்டக்கரன் படத்தில் கவுண்டமணி இல்லை என்றால் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராமராஜன்
மடோனா செபாஸ்டியனின் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நட
நடிகர் மயில்சாமியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
நகைச்சுவை நடிகர் மயில்சாமி பென்ஸ் காரை தொட்டு பார்த்ததற்காக “அந்த” ஆளு அடிச்சாரு.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகர்மறைந்த மயில்சாமி நிகழ்ச்சி ஒன்றுக்கு
நடிகர் அரவிந்த்சாமி பெற்ற புத்தக அனுபவம்
அரவிந்த்சாமி ஒரு நிறுவனத்தின் இயக்குநர். சினிமா நடிகர். அவருடைய அனுபவத்திலிருந்து, பணம் குறித்து தான் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்தபோது, The Psychology O
வேட்டையன் படத்தில் நடிக்க ராணா வாங்கிய சம்பளம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படத்தை லைகா தயாரித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் ரஜ
‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. 
பைக் ரைடில் சாதனைக்கு மேல் சாதனை செய்யும் தல அஜித்
அஜித்குமாருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், சமீபமாக பொறுமையாகவே படங்கள் நடித்து வருகிறார். அதேசமயம் அடிக்கடி உலகளாவிய பைக் பயணங்களையும் மேற
கைகோர்க்கும் ஜீவா - அர்ஜூன்
தமிழ் சினிமாவில் ஜீவா மற்றும் அர்ஜூன் இணைந்து அகத்தியா என்றதொரு புதிய படத்தில் நடிக்கின்றனர்.தமிழ் சினிமாவில் டிஷ்யூம் தொடங்கி கோ, சிவா மனசுல சக்தி, ஜ
'ஒன்ஸ்மோர்' படம் பற்றிய தகவல்
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒன்ஸ்மோர்' என பெயரிடப
இந்தியாவின் சுதந்திரத்தை முதல்முறை "ஆல் இந்தியா ரேடியோவில்" அறிவித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?
போராட்டக்காரர்கள் ஏராளம், வீழ்ந்தவர்கள் ஏராளம், தொடர்ந்து போரிட்டவர்கள் ஏராளம், எல்லாம் எதற்காக 'சுதந்திர இந்தியா' என்ற வார்த்தைகளுக்காக. அந்த வார்த்த
தொடங்கியது வேட்டையன் பட புக்கிங்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்
பா.ரஞ்சித், மாரி செல்வராஜின் கதைகள் சாதிய மோதலை ஏற்படுத்துகின்றன"- பாடலாசிரியர் குருமூர்த்தி குற்றச்சாட்டு
திருவண்ணாமலையில் கலன் திரைப்பட போஸ்டரை பட குழுவினர் இன்று வெளியிட்டனர். இந்த படத்தை வீர முருகன் இயக்குயுள்ளார், ராம லட்சுமி நிறுவனம் மற்றும் குருமூர்த
Ads
 ·   ·  7979 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ஊழியர் சேமலாப நிதியத்துக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது - பந்துல உறுதி

தேசிய மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கள் தொடர்பில் இதுவரையில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. ஊழியர் சேமலாப நிதியத்துக்கு ஆபத்து ஏற்படவுள்ளதாக போலி வதந்திகள் பரப்பப்படுகின்றன.

நாணய நிதியத்தின் ஒப்பந்தம் பகிரங்கப்படுத்தப்பட்டதைப் போன்று கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் வெளிப்படை தன்மையுடனேயே முன்னெடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை (03) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இறுதி தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை. எனினும் இதனை அடிப்படையாகக் கொண்டு சில தரப்பினரால் போலி பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அதற்கமையவே ஊழியர் சேமலாப நிதியத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளாதாகவும் வதந்திகளைப் பரப்புகின்றனர். எனினும் இவை உண்மைக்கு புறம்பானவையாகும்.தேசிய மற்றும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கள் தொடர்பில் பொருளாதார நிபுணர்களுடன் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் இன்னும் நிறைவடையவில்லை. இதற்காக பிரான்ஸின் லசார்ட் மற்றும் கிளிபர்ட் ஹான்ஸ் நிறுவனங்கள் வெளிநாட்டு கடன் வழங்குனர்களிடம் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றன.

இவற்றுடன் மத்திய வங்கி , நிதி அமைச்சு மற்றும் பொருளாதாரத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் ஏனைய நாடுகளின் நிதி அமைச்சு உள்ளிட்ட நிதி நிறுவனங்களுடன் நீண்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றன. எவ்வாறிருப்பினும் எந்தவொரு தரப்பினருடனும் இதுவரையிலும் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை.நாட்டு பிரஜைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கடன் மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.எனவே அரசாங்கம் எதை செய்தாலும் வெளிப்படை தன்மையுடன் செய்யும். அதன் காரணமாகவே இம்முறை நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என்றார்.

  • 300
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads