Category:
Created:
Updated:
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரதமர் நரேந்திர மோடியின் சித்தி நர்மதாபென் இன்று அகமதாபாத்தில் உள்ள அரசு சிவில் மருத்துவமனையில் காலமானார் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
80 வயதான நர்மதாபென், தனது பிள்ளைகளுடன் நகரின் புதிய ரனிப் பகுதியில் வசித்து வந்தார். “கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்ததால், பத்து நாட்களுக்கு முன்பு எங்கள் சித்தி நர்மதாபென் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.”என்று பிரதமரின் தம்பி பிரஹ்லாத் மோடி கூறினார்.
நர்மதாபென்னின் கணவரும், பிரதமரின் தந்தை தாமோதர்தாஸின் சகோதரருமான ஜக்ஜீவந்தாஸ் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் என்று பிரஹ்லாத் மோடி கூறினார்.