சினிமா செய்திகள்
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
ஜெயம் ரவி மீது மனைவி ஆர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு
தனது மனைவியுடன் விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அந்த அறிக்கைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டு
Ads
 ·   ·  7914 news
  •  ·  5 friends
  • I

    9 followers

மனைவி டீயில் விஷம் வைத்து கொல்ல முயற்சிப்பதாக கணவர் புகார்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருபவர் யூ எமிலி யூ. ஆரஞ்ச் கவுன்டி பகுதியில், தோல் சிகிச்சை டாக்டராக இருந்து வருகிறார். இவரது கணவர் ஜாக் சென். மனைவி எமிலி மீது கணவர் ஜாக் கோர்ட்டில் பரபரப்பு குற்றச்சாட்டுடன் வழக்கு ஒன்றை தொடுத்து உள்ளார். 

அதில், தனக்கு வழங்கிய தேநீரில் (டீ) 3 வெவ்வேறு தருணங்களில் எமிலி விஷம் கலந்து உள்ளார் என தெரிவித்து உள்ளார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு எமிலியை போலீசார் கைது செய்து விசாரணைக்கு கொண்டு சென்றனர். ஜாக், கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரலில் தனது டீயில் ஏதோ கலக்கப்படுகிறது என சந்தேகம் அடைந்து உள்ளார். 

அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதும் டாக்டரை அணுகி உள்ளார். இதில், அவருக்கு வயிற்றில் இரண்டு அல்சர் பாதிப்பு, வயிற்றில் உட்புற சுவரில் எரிச்சல் மற்றும் வயிற்று வலி, தொண்டை முதல் வயிறு வரையில் எரிச்சல், வலி உள்ளிட்டவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை டாக்டர் கண்டுபிடித்து கூறியுள்ளார். 

மருத்துவ தகவல் அடிப்படையில் மற்றும் டீ குடிக்கும்போது ஏற்பட்ட ரசாயன மாற்றம் ஆகியவற்றை வைத்து யோசித்து பார்த்த அவர், மனைவியின் செயல்களை படம் பிடிக்க சமையலறையில் கேமிராக்களை வைத்து உள்ளார். 

அதில், கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11, ஜூலை 18 மற்றும் ஜூலை 25 என 3 முறை, சாக்கடையில் ஏற்படும் அடைப்பை அகற்ற பயன்படுத்த கூடிய திரவம் ஒன்றை பாட்டிலில் இருந்து, டீயில் அதனை ஊற்றும் காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

டிரேனோ என்ற கழிவுநீர் அடைப்பை அகற்ற பயன்பட கூடியது. இந்த வீடியோ பதிவையும் ஜாக் கோர்ட்டில் சமர்ப்பித்து உள்ளார். இதனை தொடர்ந்து, ஆரஞ்ச் கவுன்டி கோர்ட்டு நீதிபதி, கடந்த 5-ந்தேதி எமிலியை குற்றச்சாட்டுக்கு உரியவராக அறிவித்து உள்ளார். 

எமிலியின் வழக்கறிஞர்களான சைமன்ஸ் மற்றும் துவாராகவுஸ்கி ஆகியோர் கோர்ட்டில் கூறும்போது, டீயில் எங்களது கட்சிக்காரர், டிரேனோவை 3 முறை ஊற்றினார். உண்மை. ஆனால் எதற்கு? எறும்புகளை கொல்ல என கூறியுள்ளனர். 

ஜாக்கின் வழக்கறிஞர் ஸ்டீவ் ஹிட்டல்மேன் கூறும்போது, அந்த வீட்டில் எறும்பு தொல்லையே இல்லை என கூறியுள்ளார். டீயில் இருந்து எறும்புகளை நீக்க வேண்டும் என்பதற்காக, அதில் டிரேனோவை கலப்பது என்பது முதன்முறையாக நான் கேள்விப்படுகிறேன் என்றும் ஸ்டீவ் கூறியுள்ளார். 

மனைவி எமிலியிடம் இருந்து ஜாக் விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்து உள்ளார். அதுபற்றிய உத்தரவை பிறப்பிக்கும்படியும் கோர்ட்டில் வேண்டுகோளாக கேட்டு உள்ளார். கேமிராக்களை மறைத்து வைத்து விட்டு, எமிலியை டீயில் திரவம் ஒன்றை கலக்கும்படி ஜாக் செட்அப் செய்து உள்ளார் என வழக்கறிஞர் சைமன்ஸ் கூறியுள்ளார். 

தேநீரின் மாதிரியை இர்வின் காவல் துறையிடம் ஜாக் கொடுத்து உள்ளார். அதனை எப்.பி.ஐ. அதிகாரிகள் பரிசோதனை செய்து அதில் டிரேனோ திரவம் கலக்கப்பட்டு உள்ளது என உறுதி செய்து உள்ளனர். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது.

 

  • 265
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads