
பாட்டலி சம்பிக்க புதிய அரசியல் கட்சியை மே மாதம் தொடங்கவுள்ளார்
அடுத்த மாதம் புதிய அரசியல் கட்சியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டை நொடிப்பு நிலையில் இருந்து காப்பாற்ற ஐக்கியக் குடியரசு முன்னணி என்ற கட்சி மே மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
“நமக்கு தகுதி அடிப்படையிலான அரசியல் அமைப்பு தேவை, குடும்ப பரம்பரை அடிப்படையிலான அரசியல் அமைப்புகளுக்கு முடிவு கட்ட வேண்டும். பொதுமக்களின் வாக்குகளை லஞ்சம் கொடுத்து வெல்லும் அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இப்போது பின்பற்றும் காலாவதியான சோசலிச-முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு மாறாக, நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு நமக்கு ஒரு புதிய அரசியல் நடைமுறைவாதம் தேவை. இந்த புதிய அரசியல் சித்தாந்தத்தை மே மாதம் வெளியிட உள்ளோம். அது ஐக்கியக் குடியரசு முன்னணி என்று அழைக்கப்படுகிறது” என்று புதிய கட்சி குறித்து பாட்டலி சம்பிக்க கூறினார்.