
மக்களுக்கு 24 மணிநேர தடையில்லாத மின்சாரத்தை வழங்க ஏற்பாடு
காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தி மூலமான மின் திட்டங்களை உருவாக்குவது போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்த பிறகு, சூழலிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதற்கு உத்தேசித்திருக்கின்றோம்.
அத்திட்டத்தினடிப்படையில் எப்பகுதியில் அது உற்பத்தியாக்கப்படுகின்றதோ, அப்பகுதி மக்களிற்கு 24 மணிநேர தடையில்லாத மின்சாரத்தையும், குறைந்த விலையில் வழங்கும் ஏற்பாடும் ஒ்ன்று செய்யப்பட்டு வருகின்றது. அதைவிட அந்த முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடி அப்பகுதி மக்களிற்கு நீடித்த, நிலையான, கௌரவமான வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவற்றைவிட எல் ஆர் சியின் காணி பங்கீடு சம்மந்தமாகவும், அதை மீளாய்வு செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் மற்றும் சட்டவிரோத மண்ணகழ்வு காரணமாக கண்ணிவெடி அகற்றும் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை தொடர்பாகவும் இன்று கலந்துரையாடப்பட்டது என தெரிவித்தார்.
இதேவேளை, இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவினார், அன்று இருந்த புலிகள் இயக்கத்தால் தங்களுடைய சில தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அந்த படகுகளை இங்கு இலகுவாக வந்து தொழில் செய்யக்கூடிய நிலையை ஏற்படுத்திவிட்டார்கள்.
அதே நேரத்தில் எங்களுடைய கடற் தொழிலாளர்கள் அன்றைக்கு கடலில் இறங்க முடியாத நிலை இருந்தது. ஆனால் இன்று எமது கடற் தொழிலாளர்கள் கடடிில் இறங்கி தங்களுடைய வாழ்வாதாரத்தை முன்னெடுக்கின்ற வேளையில், மீண்டும் இந்திய இழுவைப்படகுகளுடைய எலலை தாண்டிய, அத்துமீறிய சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுகின்றபடியினால், எங்களுடைய வழங்கள் அழிக்கப்படுகின்றது.
எங்களுடைய மீனவர்களுடைய வாழ்வாதாரம் சீரழிக்கப்படுகின்றது. கடல் உபகரணங்கள் அழிவிற்குட்படுத்தப்படுகின்றது. அதேநேரத்தில் அவர்கள் நூற்றுக்கணக்கில் வருகின்றபொழுது, எங்களுடைய கடற்தொழிலாளர்கள் தங்களுடைய தொழிலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
இந்திய மக்களிற்கு ஒரு தவறான படம் காட்டப்படுகின்றது. ஆனபடியால், எமது பாதிக்கப்பட்ட மக்கள் நேரில் சென்று அதை தடுக்கின்ற பொழுது அல்லது கடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்ற பொழுது தெ்னிந்திய மக்களிற்கும், இந்திய மக்களிற்கும் சரியான செய்தி போய் கிடைத்து அந்த தொழிலை அவர்கள் இலகுவாக நிறுத்துவார்கள் என்று நம்புகின்றேன்.
அதே நேரத்தில் ஜனாதிபதி வரைவாக புது டெல்லி செல்ல இருக்கின்றார். அங்கும் எங்களுடைய கடற்தொழிலாளர்களது பிரச்சினையை அதிலும் தீர்வு காணுவார் என்று நம்புகின்றேன் என அமைச்சர் தெரிவித்தார்.