Category:
Created:
Updated:
காத்தான்குடியை சேர்ந்த எம்.ஐ.எம். மாஹீர் கிழக்கு மாகாண இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இந்த திணைக்களத்தில் பிரதி ஆணையாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே மாஹீர் ஆணையாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
உள்நாட்டு இறை வரி திணைக்களத்தில் வரி உத்தியோகத்தராக இணைந்து மதிப்பீட்டாளராக கடமையாற்றி உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பிரதி ஆணையாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே ஆணையாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.இவருக்கான இந்த நியமனம் கிழக்கு மாகாண ஆளுனரினால் வழங்கப்பட்டுள்ளது.