சினிமா செய்திகள்
கேப்ரில்லாவுக்கு லண்டனில் கிடைத்த மோசமான அனுபவம்
அடிக்கடி தனது கிளாமரான புகைப்படங்களையும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் கேப்ரில்லாவுக்கு நெட்டிசன்ஸ் மத்தியில் மிகுந்த வரவேற
சுந்தர் சி யை கெட்ட வார்த்தையில் திட்டிய மணிவண்ணன் - எதற்காக தெரியுமா?
ஈரோட்டில் பிறந்த விநாயக சுந்தரவேல் என்பவர் தனது தந்தையின் பெயரான சிதம்பரம் என்பதன் முதலெழுத்தைச் சேர்த்து சுந்தர் சி ஆக தமிழ் சினிமாவில் பிரபல இயக்குந
விசுவின் பார்வையில் கண்ணதாசன்
ஒரு பாடலை வாங்கி வருவதற்காக கண்ணதாசனிடம் அனுப்புகிறார் இயக்குநர். விசுவிற்கு மிகுந்த தயக்கம். இருந்தாலும் ‘நாடக உலகப்’புகழ் தந்த துணிச்சலில் சென்று வி
மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளத்தில் ’மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள குறித்து கூ
75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்
தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. அப்போது தொடங்கிய அரண்
42 வயதில் நடிகை அனுஷ்கா திடீர் திருமணம்..?
பில்லா, வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், சிங்கம் 2, லிங்கா, என்னை அறிந்தால் ருத்ரமா
கவர்ச்சி போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக தன்னுடைய டீனேஜ் வயதிலேயே அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அத
ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் அசத்தும் அழகில் மாளவிகா மோகனன்
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும், படு கிளாமரான உடையில் அசத்தும் நடிகை அமலா பால்
சமூக வலைத்தளங்களிலும் புதிய படங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணத்தில் அடிக்கடி கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வரும
கிளாமர் உடையில் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்
இந்திய அளவில் தற்போது பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில்
பிரபாஸ் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் ராஜமௌலி
கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க 20 நாட
அறியப்படாத படம் - இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்
1980 கால கட்டங்களில் வெளியான படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பெரும்பாலும் ஹிட் ஆயிருக்கும். அதற்கு காரணம் இசை, பாடியவரின் குரல் வளம் உள்ளிட்ட பல காரணங்கள
Ads
 ·   ·  669 news
  •  ·  15 friends
  • S

    23 followers

சீனா புகுந்த நாடும் ஆமை புகுந்த வீடும் என்றுமே உருப்படாது – இராதாகிருஸ்ணன்

மலையக மக்கள் முன்னணியின் மறுசீரமைப்பு கூட்டம் இன்று (25) பதுளை ரிவ சைட் விருந்தகத்தில் நடைபெற்றது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்பாக மலையக மக்கள் முன்னணியின் ஊவா மாகாணத்திற்கான புதிய காரியாலயமும் திறந்து வைக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பேராசிரியருமான விஜேசந்திரன் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம் மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் கே.சுப்பிரமணியம் நிதிச்செயலாளர் விஸ்வநாதன் புஸ்பா மகளிர் அணி செயலாளர் சுவர்ணலதா பிரதேச சபை உறுப்பினர், கிருஸ்ணவேனி பிரதேச சபை உறுப்பினர் சிவநேசன் பிரதி செயலாளர் பத்மநாதன் பிரதி செயலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான சிவஞானம் உட்பட மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய இராதாகிருஸ்ணன், இன்று இலங்கை என்ற அழகிய தீவு ஒவ்வொரு நாட்டிற்கும் துண்டாடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதற்கு காரணம் அன்று பெரும்பான்மை சமூகம் மலையக மக்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இந்த நாட்டில் இழைக்கப்பட்ட அநீதியாகும்.

இந்த நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தால் பொது மக்கள் பலர் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதே போல 83 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின் பொழுது மலையக மக்கள் அனைத்து இடங்களிலும் பாதிக்கப்பட்டார்கள்.

அன்று அந்த விடயங்களை நினைத்தும் பார்த்தும் ஒரு சில பெரும்பான்மை சமூகத்தினர் சந்தோசப்பட்டார்கள். இந்த நாடு தமிழர்களுக்கு சொந்தமில்லை இது தனியே பெரும்பான்மை மக்களுக்கான நாடு என்று பிரச்சாரம் செய்தார்கள்.

ஆனால் இன்று இலங்கையின் நிலை என்ன? பல நாடுகள் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே விலைபேசி வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு காரணம் பெரும்பான்மை சமூகம் இந்த நாட்டில் இருக்கின்ற அனைவரையும் இந்த நாட்டின் பிரஜைகளாக நினைக்கவில்லை.

தனியே இந்த நாடு பெரும்பான்மை மக்களுக்கு சொந்தமான நாடு என கூறுகின்றார்கள். இந்த நிலைமை தொடருமானால் இன்னும் ஒரு சில வருடங்களில் இலங்கையில் பல தீவுகள் உருவாகலாம். அதன் முதலாவது தீவாக தற்பொழுது கொழும்பில் அமைக்கப்பட்டு வருகின்ற போட் சிடி என்று சொல்லப்படுகின்ற அபிவிருத்தி சீனாவின் தீவாக மாறிவிடும்.

இப்படி பல தீவுகள் இங்கே உருவாகி இலங்கை என்ற ஒரு நாடு இல்லாமல் போய்விடும். எனவே இந்த நாட்டை பாதுகாத்து கொள்ள வேண்டுமாக இருந்தால் நாம் அனைவரும் இலங்கையர் என்ற வகையில் ஒன்றுபட வேண்டும்.

அப்படி ஒன்றுபடாவிட்டால் ஆண்டவன் கூட இந்த நாட்டை காப்பாற்ற முடியாது. எனவே இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகம் தமிழர்கள் முஸ்லிம்கள் ஏனையவர்களையும் தங்களுடைய குடும்பத்தில் ஒருவராக கருத வேண்டும். அப்படி செய்தால் நிச்சயமாக இந்த நாட்டை காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் சீனா புகுந்த நாடும் ஆமை புகுந்த வீடும் என்றுமே உருவப்படாது என்பதுதான் உண்மை. எனவே இதனை புரிந்து இந்த அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டும்.

  • 496
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads