Category:
Created:
Updated:
கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு 40 பயணிகளுடன் சென்ற ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.
கோவையில் இருந்து பெங்களூரூக்கு ஆம்னி பேருந்து ஒன்று நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. புதுச்சாம்பள்ளி என்ற இடத்தில் சென்றபோது, பேருந்தின் பின்புறம் புகை வந்துள்ளது. உடனே ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு, பரிசோதனை செய்த எண்ணினார்.
அடுத்த சில நொடிகளில் பேருந்தில் திடீரென்று தீப்பிடித்து பேருந்தின் உள்ளுக்குள் பரவியது. பயணிகள் ஜன்னல் வழியே கீழே குதித்தனர். இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், 30 நிமிடங்கள் போராடி தீயணை அணைத்தனர்.
பேருந்தில் பயணித்த ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 44 பயணிகள் உயிர்தப்பினர். இதில்,11 பேர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.