Category:
Created:
Updated:
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி நிறுவனத்தின் விவகாரம் ஆகியவற்றால் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் பட்ஜெட் கூட்டத்தொடர் பிரச்சனை இல்லாமல் நடக்குமா? எதிர்க்கட்சிகள் பட்ஜெட் கூட்டத்தை சமூகமாக நடத்த ஒத்துழைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரதமர் மோடி இன்று நாடாளுமன்ற கூட்டத்தை எப்படி நடத்துவது என்பது குறித்த ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் எதிர்க்கட்சிகள் பிபிசி உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பினால் எப்படி சமாளிக்கலாம் என்பது குறித்து ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.