Category:
Created:
Updated:
ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் என்பவர் ஜர்சுவாடா என்ற மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் நபாதாஸ் படுகாயம் அடைந்த நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.