சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

தமிழ்நாடு அரசின் 'மக்கள் ஐடி' என்பது என்ன? 'ஆதார்' எண்ணுக்குப் போட்டியா?

நலத்திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்த, தமிழ்நாடு அரசு 'மக்கள் ஐடி' என்ற பெயரில் ஒரு தனித்துவம் மிக்க அடையாள எண்ணை உருவாக்க விரும்புவதாகவும் அதற்கான திறன் கொண்ட நிறுவனங்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த டெண்டர் அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு அரசு மக்கள் ஐடி என்ற பெயரில், இந்திய மக்களுக்கு என ஆதார் எண் இருப்பதைப் போல தமிழ்நாட்டு மக்களுக்கு என ஒரு தனித்துவமான அடையாள எண்ணை உருவாக்கப் போவதாக செய்திகள் பரவின.

இதையடுத்து, இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்துவம் மிக்க எண்களை வழங்கும் 'ஆதார்' என்ற திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளபோது, தமிழ்நாடு அரசு புதிதாக மேலும் ஒரு தனித்துவமான அடையாள எண்ணை உருவாக்க விரும்புவது ஏன் என்ற விவாதமும் ஏற்பட்டது.

தமிழ்நாடு அரசு தற்போது அந்த டெண்டரில் முன்வைத்திருக்கும் குறிப்புகளின்படி, "மாநிலத்தில் உள்ள குடும்பங்களின் தகவல் தொகுப்பை தமிழ்நாடு அரசு உருவாக்க விரும்புகிறது. அந்தத் தகவல் தொகுப்பை உருவாக்குவதன் மூலம், திட்டமிடுதல், அவற்றைச் செயல்படுத்துதல் ஆகியவை மேம்படும் என்று அரசு கருதுகிறது.

இந்த திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்துவமிக்க ஓர் அடையாளம் உருவாக்கப்படும். இது மக்கள் ஐடி எனப்படும். இந்த ஐடிக்கான எண்கள் ஏதாவது ஒரு விஷயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்காமல் 'Random' முறையில் உருவாக்கப்படும்.

இந்த ஐடியில், 10 அல்லது 12 எண்கள் இடம்பெற்றிருக்கலாம். தற்போதைய மக்கள் தொகையையும் எதிர்கால மக்கள் தொகையையும் மனதில் கொண்டு இந்த எண்கள் எவ்வளவு நீளம் என்பது முடிவு செய்யப்படும்.

ஒருவருக்கே இரண்டு எண்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதைத் தவிர்க்க, ஆதார் எண்கள், குடும்ப அட்டை எண் போன்றவற்றில் உள்ள தகவல்கள் பயன்படுத்தப்பட்டு, ஒரே பயனாளி இருமுறை தகவல் தொகுப்பில் இடம் பெறாமல் தவிர்க்கப்படும்.

இந்தியா முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் ஆதார் எண்ணிற்கும் மக்கள் ஐடிக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன.

1. ஆதார் அடையாளத்தைப் பொறுத்தவரை, எல்லா தகவல்களுடனும் சம்பந்தப்பட்ட குடிமகனுக்கு ஒரு அடையாள அட்டை வழங்கப்படும். மக்கள் ஐடியில் அப்படி எந்த அடையாள அட்டையும் வழங்கப்படாது.

2. ஆதார் அட்டையின் நோக்கம், அரசின் திட்டங்களைப் பெறுவதற்கு, வங்கிகளில் பயன்படுத்துவதற்கு தனித்துவமான ஒரு அடையாளத்தை உருவாக்குவது. ஆனால், மக்கள் ஐடியைப் பொறுத்தவரை, இதிலும் தனித்துவமான எண் இருக்குமென்றாலும்கூட, அவை தமிழ்நாட்டின் அரசுத் துறைகளுக்குள் மட்டும் பயன்படுத்தப்படும். ஆதார் எண் இல்லாத பயனாளிகளும்கூட, மக்கள் ஐடியின் மூலம் அரசுத் துறைகளுக்குள் அடையாளம் காணப்படுவார்கள்.

3. ஆதார் எண்ணை எல்லா இடங்களிலும் ஒற்றை அடையாளமாக பயன்படுத்த முடியும். ஆனால், மக்கள் ஐடி எண்ணை அப்படிப் பயன்படுத்த முடியாது.

4. ஆதார் எண்ணைப் பெற, சம்பந்தப்பட்டவர்கள் கைரேகை, கருவிழிப் படல அடையாளம் போன்றவற்றை அரசுக்குத் தர வேண்டும். ஆனால், மக்கள் ஐடிக்கு என இது போன்ற அடையாளங்கள் எதுவும் சேகரிக்கப்படமாட்டாது. மக்கள் ஐடி என்பது, தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் பலன்களைப் பெறுபவர்களை அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் ஒரு எண் மட்டுமே.

5. ஆதார் எண்ணைப் பொறுத்தவரை, சில தருணங்களில் ஒரே எண்ணுடன் வேறு வேறு பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன. அந்தத் தருணத்தில் KYC சரிபார்த்தல் தேவைப்படுகிறது. ஆனால், மக்கள் ஐடியில், பல துறைகளிலும் உள்ள அடையாளங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, ஒருவரது 'Golden Record' உருவாக்கப்படும். அதில் இது போன்ற பிரச்சனைகள் இருக்காது.

6. ஆதார் எண்ணைப் பொறுத்தவரை, வெவ்வேறு சேவைகளோடு வாடிக்கையாளர்கள் அதனை இணைக்க வேண்டும். மக்கள் ஐடியில் அப்படி எந்த சேவையோடும் இணைக்க வேண்டியதில்லை. பல துறைகளிலும் உள்ள புள்ளிவிவரங்கள் ஒன்றாக இணைக்கப்பட்ட பிறகே இந்த ஐடி உருவாக்கப்படும்.

மேலும், அரசுத் துறைகள் ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றன. ஆனால், ஆதார் எண்ணைப் போல, இந்த எண் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிந்திருக்காது.

இந்த திட்டம் குறித்து, மேலும் விளக்கம் அளிக்கப்படுமா என்பது குறித்து அறிய மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜை தொடர்புகொள்ள பல முறை முயன்றும், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

  • 376
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads