Category:
Created:
Updated:
2023ம் ஆண்டு இருவேறு சந்தர்ப்பங்களில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, ஜனவரி மற்றும் ஜுன் மாதங்களில் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மின்சார சபை எதிர்நோக்கியுள்ள நட்டத்தை ஈடு செய்ய வேண்டுமாயின், 70 சதவீத மின்சார கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. எனினும், மின்சார கட்டணத்தை அதிகரிப்பது குறித்து இதுவரை எந்தவித தீர்மானமும் எட்டப்படவில்லை என பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.