Category:
Created:
Updated:
தேசியப் பூங்காக்களுக்குள் பதிவு செய்யப்பட்ட சஃபாரி வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் உள் நுழைவதை தடைசெய்து, சுற்றாடல் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து புதிய சட்டத்தை உருவாக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய திணைக்களங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதுவரை இந்த தேசிய பூங்காக்களுக்குள் பதிவு செய்யப்பட்ட சஃபாரி வாகனங்களைத் தவிர வேறு எந்த வாகனத்தையும் பிரவேசிக்க அனுமதிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், சிவனொளிபாதமலை வனப்பகுதி மற்றும் சிங்கராஜ வனம் போன்ற சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாப்பதற்கு தனியான சட்டங்களை உடனடியாக உருவாக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.