Category:
Created:
Updated:
தமது ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்திய வன்னம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவர்கள் பலர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த எதேச்சதிகார செயற்பாடு எதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.அரசாங்கம், அரச பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்திய வன்னம் மக்களை எதேச்சதிகார ரீதியாக கைது செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.சர்வகட்சி வேலைத்திட்டத்திற்கு ஆதரவை கோரும் அதேவேளை, எதிர்க்கட்சி அதற்கு தயாராக இருக்கும் நிலையில், அரசாங்கம் இத்தகைய போக்கில் ஜனநாயகமற்ற மற்றும் எதேச்சதிகார செயற்பாடுகளில் ஈடுபடும் பட்சத்தில் தாம் எவ்வாறு இதற்கு ஆதரவளிப்பது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.