Category:
Created:
Updated:
ரோஹித ராஜபக்ஷவிற்கு சொந்தமானதாக கூறப்படும் உல்லாச விடுதி தொடர்பில் உண்மையை கண்டறியுமாறு சர்வ-பார்ஷவிக அரகலகருவோ இயக்கம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
குறித்த பகுதியில் தனக்கு சொந்தமான பங்குதாரர் சொத்து இருப்பதையும், அனைத்து சட்ட தேவைகளையும் பூர்த்தி செய்த பின்னரே இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக ரோஹித உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருந்தால், அதற்கு எதிராக நீதி விசாரணையை ஆரம்பிக்க முடியும் எனவும் ரோஹித ராஜபக்ச தெரிவித்துள்ளார். இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் தமது பிரிவினர் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.