
கண்மூடித்தனம் வேண்டாம், பதவி விலகுங்கள் - சஜித் பிரேமதாஸ
மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், டுவிட்டர் செய்திகள் மூலம் மன்னிப்பு கேட்காமல் உடனடியாக பதவி விலகுமாறும், அவ்வாறு பதவி விலகும் பட்சத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் திறமையான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு நாட்டைக் பெறுப்பேற்பதாகவும், கோடிக்கணக்கான மக்களின் ஜனநாயகக் அபிப்பிராயத்தின் படி, அடுத்த ஐந்தாண்டு காலத்திற்குள் நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு நிச்சயம் கட்டியெழுப்புவதாகவும், மோசடி அல்லது ஊழலுக்கு இங்கு இடமிருக்காது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (27) தெரிவித்தார்.
ஒரு சூப்பர் பிரதமரைக் கொண்டு வந்து நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் நடத்திய பொய் நாடகங்கள் அனைத்தும் தற்போது மக்களிடம் அம்பலமாகியுள்ளதாகவும், இவ்வாறானதொரு நிலை இருந்தும் அவ்அப்போதைய நேரத்தை சமாளிக்க பொய்களை கூறும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று எரிவாயு,எரிபொருள், பால் மா கேட்டு போலி நாடகத்தை ஆரம்பித்துள்ளார் எனவும், இவ்வாறான பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றுவதை நிறுத்துமாறும் கோரிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, கோப் குழுவில் முறையற்ற அழுத்தம் பிரயோகித்தவர்களை அம்பலப்படுத்துவது கோப் குழுத்தலைவரின் பொறுப்பாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.