சினிமா செய்திகள்
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
டி. எம். சௌந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
"அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்
Zoom செய்து பார்த்த ரசிகர்கள் - சிக்கிய ஸ்ரீலீலா
சில வீடியோக்களை பார்த்து நடிகைகளை கலாய்த்தும் பங்கம் செய்தும் காமெடி வீடியோக்கள் இணையத்தில் வெளி வந்து வைரலாகி வருதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில்
ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டார் பிரியாமணி
பிரியாமணி கடந்து 2010 ஆம் ஆண்டில் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.திருமணத்திற்கு பிறகு சில வருடம் திரைப்படங்க
மதுரையில் நடந்து முடிந்தது ரோபோ சங்கர் மகளின் திருமணம்
நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. குடும்பத்தினரால் நிச்சயிக்கப் பட்டு கோலாகலமாக நடந்து முடிந்த
வேறொரு பெண்ணுடன் 4 வருஷமாக தொடர்பில் இருக்கும் கணவன் குறித்து வருந்திய நடிகை
துக்ளக் தர்பார், வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ள சமயுக்தா பிக் பாஸ் மூலம் பிரபலமானார். இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், கணவர் கார்த்திக் துபாயில் வேல
தன் குழந்தை முன்னிலையில் காதலனுடன் நிச்சயதார்த்த மோதிரம் மாற்றிக்கொண்ட நடிகை
நடிகை எமி ஜாக்சனுக்கு லண்டனில், கடந்த சில நாட்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் பரவி வரு
Ads
 ·   ·  7392 news
  •  ·  5 friends
  • I

    9 followers

9 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சைக்கோ கணவன்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாநகர காவல் ஆணையருக்கு இரு பெண்கள் தங்கள் கணவர் மீது புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கன்சர்லபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதில் தங்களது கணவர் அருண் குமார் என்பவர் ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறினர்.

 

இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அருண் 9 திருமணங்கள் செய்து கொண்டுள்ளதாகவும், ஆனால் அவரது செல்போன் அழைப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில், அவர் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளதும், அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு தள்ளியதும் தெரிய வந்துள்ளது.

இதுமட்டுமின்றி, திரைப்படங்கள் மீது அதிக நாட்டம் கொண்ட அருண் குமார், திரைப்பட வசனங்கள் பேசியே, பெண்களை தமது வலையில் வீழ்த்தியுள்ளார். ரகசியமாக திருமணம் செய்து கொள்ளும் அவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியுள்ளார்.

மறுப்பு தெரிவிப்பவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்து அடித்து துன்புறுத்தியுள்ளார். அருண் குமாரிடம் சிக்கிய இரு பெண்கள் மகளிர் ஆணையத்தின் உதவியுடன் போலீசாரை நாடிய பின்னரே, இந்த விவகாரம் தெரிய வந்தது.

புகாரளித்துள்ள இரு பெண்களும், அருண் குமாரின் முதல் இரு மனைவிகள் என்று தெரியவந்துள்ளது. மேலும், அருண் குமாரால் பாதிக்கப்பட்ட பெண்கள், நேரடியாக போலீசாரை அணுகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே இந்த வழக்கில் டி.ஜி.பி. கெளதம் சவாங் நேரடியாக சிறப்பு கவனம் செலுத்தி விசாகப்பட்டினம் துணை காவல் ஆணையர் ஐஸ்வர்யா ரஸ்தோகி தலைமையில் விசாரணையை தொடங்கிய போலீசார், அருண் குமாருக்கு பாலியல் தொழில் மற்றும் கஞ்சா கடத்தல் விவகாரத்தில் தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

மேலும், அருண் குமார் அவரது நண்பரையே கொலை செய்துள்ளதாக விசாகப்பட்டினம் காவல் ஆணையர் மனிஷ்குமார் சின்ஹாவிற்கு வாட்ஸ் ஆஃப் மூலம் பெண் புகார் அளித்தார். கொல்லப்பட்ட அந்த நபர் அருண் குமாரின் நண்பர் என்றே கூறப்படுகிறது.

 

மேலும், அருண் குமாரின் குடியிருப்பில் இருந்து பல ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அருண் குமாருக்கு இந்த தொழிலில் உதவி செய்தவர்களையும் போலீசார் விசாரணையை செய்து வந்த நிலையில் கன்சர்லபாளையம் போலீசார் அருண் குமாரை கைது செய்து இந்த வழக்கின் பின்னனியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்களை ஏமாற்றி காதல் வலையில் விழ வைத்து அவர்களை பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி பணம் சம்பாதிக்கும் கொடூரனின் சம்பவத்தில் ஆந்திர முக்கிய புள்ளிகளும் இடம்பெறலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

  • 542
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads