Category:
Created:
Updated:
எரிபொருள் விநியோகத்திற்கு எதிராக வீதிகளை மறித்து போராட்டம் நடத்திய பலர் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் நின்றவர்கள் அல்ல என்பது தெரியவந்துள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கையடக்க செயலி மூலம் எரிபொருள் சேகரிக்கும் நோக்கில் நேற்று முன்தினம் (27) மாத்திரம் பல தடவைகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வந்த 1200 இற்கும் அதிகமானவர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சில் நேற்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.