சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

8 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு வந்த கடிதங்களை பதுக்கி வைத்த தபால்காரர்

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கன்னகிரி தாலுக்காவில் உள்ள கௌரிபுரா தபால் நிலையத்தில் இருந்து கடந்த 8 வருடமாக பொதுமக்களுக்கு எந்த ஒரு தபால் கடிதமோ அல்லது ஆவணங்களோ வராமல் தவித்து வந்தனர். கௌரிபுரா தபால் நிலையத்தில் இருந்து பசரிஹரா, தேலாபுரா , பைலாகம்புரா உள்ளிட்ட 5 கிராமங்களுக்கு அனைத்து தபால்கள் வழங்கப்படும். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக இந்த 5 கிராம மக்களுக்கு தபால் நிலையத்தில் இருந்து ஒரு தபால் கூட வழங்கப்படவில்லை. 

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தபால் நிலையம் அருகே இருந்த குப்பைத்தொட்டியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு நூற்றுக்கணக்கான ஆதார் கார்டு , பான் கார்ட் என பல்வேறு ஆவணங்கள் கொட்டி கிடந்தன. இதை சிறுவர்கள் கிராம மக்களிடம் தெரிவிக்கவே மக்கள் குப்பையில் இருந்த ஆவணங்களை ஆராய்ந்து பார்த்த போது பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மக்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட ஆதார் அட்டை, பான் கார்ட், வங்கி டெபிட் கார்டு, செக் புக், அரசு வேலையில் சேர அனுப்பப்பட்ட கடிதம், தங்க நகை கடன் ஜப்தி கடிதம், எல் ஐ சி பிரீமியம் கட்ட வலியுறுத்தி அனுப்பப்பட்ட கடிதம் என பல்வேறு ஆவணங்கள் இந்த குப்பையில் கிடைத்தது. 

பல வருடங்களாக தங்களுக்கு வர வேண்டிய தபால்கள் குப்பையில் இருப்பதை அறிந்த கிராம மக்கள் தங்களது ஆவணங்கள் இங்கு உள்ளதா என படையெடுப்பு குப்பையில் தேட துவங்கினர். கௌரிபுரா தபால் நிலையத்தில் கடந்த பத்து வருடங்களாக தபால்காரராக பணியாற்றி வரும் வினய் முதல் இரண்டு வருடங்கள் மக்களுக்கு முறையாக தபால்களை வழங்கி வந்துள்ளார். ஆனால் கடந்த 8 வருடமாக அவர் மக்களுக்கு வழங்க வேண்டிய கடிதங்களை வழங்காமல் அதை பதுக்கி வைத்துவிட்டு அனைத்தும் மக்களிடம் வழங்கப்பட்டதாக அரசிடம் தெரிவித்து வந்துள்ளார். சிறுவர்கள் குப்பையில் ஆவணங்களை கண்டெடுத்த பிறகு வினய் இன் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனிடையே வினய் மீது துறை சார்ந்த விசாரணைக்கும் நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • 655
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads